திராவிடர் - ஆரியர் உண்மை
திராவிடர் - ஆரியர் உண்மை
பெரியார் எழுதிய நூல்கள்
தமிழ்நாட்டுச் சுற்றுப்பிரயாணத்தில் திருச்சி சேலம் முதலிய பல இடங்களில் பெரியாருக்கு வரவேற்பும், பணமுடிப்பும் அளிக்கப்பட்ட கூட்டங்களில், வரவேற்புகளுக்கும் பணமுடிப்புகளுக்கும் தந்தை பெரியார் அளித்த பதிலின் தொகுப்பு வருமாறு :
தோழர்களே, நான் இந்த ஊர்களுக்கு பல தடவை வந்திருக்கிறேன், எத்தனையோ தடவை பொதுக்கூட்டங்களிலும் பேசி இருக்கிறேன். பல தடவை இந்த ஊர்த்தெருக்களில் நடந்திருக்கிறேன். அந்தக் காலத்திலெல்லாம் இல்லாத மாதிரி இப்பொழுது மாத்திரம் எனக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரமும், ஆர்பாட்டமும் ஆன வரவேற்பு நடக்க வேண்டும்? நான் உங்களுக்குப் புதியவனா? வெளிநாட்டிலிருந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வரப்பட்டவனா? அல்லது உங்களுக்கு இது செய்கிறேன், அது செய்கிறேன், மழையை வரவழைக்கிறேன், தரித்திரத்தையும், நோயையும் ஓட்டுகிறேன், வெள்ளையனை விரட்டுகிறேன், 8-நாள் 10- நாள்களில் சுயராஜ்யம் கொண்டு வருகிறேன் என்று ஏதாவது உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி மயக்கினவனா? ஒன்றும் இல்லையே?
சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு
உங்களில் பலர் அதிருப்தி அடையும்படியும் அரசியல், சமூக இயல் ஆகியவைகளில் உங்களுடைய பழக்கவழக்க நம்பிக்கைகளுக்கு மாறாகவும் பேசுகிறேன், சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு என்கிறேன். இந்தியா என்பது கற்பனை என்றும் சொல்லுகிறேன், காங்கிரஸ் என்பதும், தேசீயம் என்பதும் ஆரியர்க்கு அரண் என்றும் சொல்லுகிறேன், இந்துமதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும் அப்படிச் சொல்வது தமிழர்க்கு இழிவு என்றும் கூட சொல்லுகிறேன், இன்னமும் பல உங்களுக்கு புதியதாயிருக்கும்படியாகவும ், காதுக்கு இனிப்பைக் கொடுக்கக்கூடியதாக இல்லாததாகவும் பேசுகின்றேன்.
இப்படியெல்லாம் பேசுகிற ஒருவனை, நான் சொல்வதை அப்படியே ஒப்புக் கொள்ள தயங்குகிற நீங்கள் இவ்வளவு ஆடம்பரத்துடன், உற்சாகத்துடன் வரவேற்பதை நான் எனக்காக என்று எண்ணமுடியுமா? ஒரு நாளும் அப்படி நான் நினைக்கவில்லை. இந்த ஆடம்பர வரவேற்புகளால் நான் பெருமை அடையவில்லை.
ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம்
ஆனால் பின்னை யாருக்கு? எதற்காக? என்பதை நான் சொல்ல வேண்டாமா? அதைச் சொன்னால்தான் என்னை உண்மையை அறிந்தவன் என்று நீங்கள் கருதமுடியும். அதென்னவென்றால் பார்ப்பனர்கள் தேசீயத்தின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால், காங்கிரசின் பேரால் காந்தியைக் காட்டி உங்களிடம் ஓட்டு பெற்று மந்திரிப் பதவி அடைந்த 25- மாதத்தில், அவர்கள் உங்களுக்குச் செய்த கொடுமையையும், அட்டுழியங்களையும் பொறுக்கமாட்டாமல், உங்களுடைய வயிறு எரிந்து, நெஞ்சம் குமுறி, ரத்தம் கொதித்து ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம் என்றே கருதுகிறேன்.
இந்த வெறியாட்டம் என்னை வைத்து நீங்கள் ஆடுவதற்குக் காரணம் நான் அந்தக் காலத்தில், அதாவது நீங்கள் பார்ப்பனப் புரட்டுக்கு மயங்கி மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு கொடுக்கப்போகும் காலத்தில் அவர்கள்
(காங்கிரஸ்காரர்கள்) உங்கள் ஓட்டுக்களைப் பெற்றால் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று புட்டுப்புட்டு விளக்கமாக விளக்கிய காலத்தில், நீங்கள் வேசியின் மையலில் மயங்கிய மைனர்களுக்குச் சொல்லும் புத்திமதி அடையும் கதிபோல் அவற்றை அலட்சியப்படுத்திவிட்டு கண்மூடித்தனமாய் நடந்து கொண்டதை தவறு என்று என்னிடம் ஒப்புக் கொள்ளும் பாவனையாய் என்னை முன்னிறுத்தி ஆத்திரம் கொண்டாடுகிறீர்கள் என்றுதான் கருதுகிறேன்.
இந்த ஆத்திரக் கொண்டாட்டத்தில் மஞ்சள் பெட்டிக்கு மக்களின் தரம் தெரியாமல் ஓட்டளித்த உங்களில் அனேகரை வெட்கப்படச் செய்திருக்கிறது என்பதையும் நான் உணருகிறேன்.
தோழர்களே, உலகத்தில் இவ்வளவு பெரும்பான்மையான மெஜாரிட்டியாரின் ஆதரவுடன் அதிகாரம் பெற்றவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் பொதுமக்களின் மனக் கொதிப்புக்கு ஆளாகி பொது ஜன ஆதரவிழந்து வீழ்ச்சியடைந்ததாக சரித்திரத்தில் கூட பார்ப்பது அரிதாகும்.
ஆணவம் எங்கே?
இன்று அவர்களுடைய, காங்கிரஸ்காரர்களுடைய, பார்ப்பனர்களுடைய ஆணவம் எங்கே? அகம்பாவம் எங்கே? சட்டசபைகளில் நம் தலைவர்களை சிறிதுகூட மதிக்காமல் "எங்களை அனுப்பிய பொது ஜனங்களைப் போய்க் கேளுங்கள்" என்று அவர்கள் கூறிய திமிரான பேச்சு எங்கே? இன்றைய வீழ்ச்சி எங்கே? என்று பாருங்கள்.
என்ன வீழ்ச்சி என்று யாராவது தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்களா? சொல்லுகிறேன் கேளுங்கள்.
தமிழ்நாட்டுத் தலைவரென்றவரும், காங்கிரஸ் முதன் மந்திரியும், காந்தியாரின் அடுத்த பதவியில் இருப்பவருமான தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் செல்லுமிடங்களிலெல்லாம் பல நூற்றக்கணக்கான கறுப்புக் கொடியும், போலீசு உதவியில்லாமல் நடக்க முடியாத நிலையும், காவலோடு காரிலிருந்து இறங்கி காவலோடு காரில் ஏற்றி, முட்டாக்குப் போட்டு காரை ஓட்ட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டு இருப்பதும் - காங்கிரசுக்கு எதிரி, தேசத்துக்கு எதிரி, மனித சமூகத்திற்கு எதிரி ,காந்தீயத்துக்கு எதிரி என்று தப்பட்டை மூலம் பறை அறிவிக்கப்பட்ட எனக்கு இப்படி 50- ஆயிரம் பேர், லட்சம் பேர் வரை கூடி ஊர்வலம் செல்வதும், வானம் இடிபட வாழ்த்துக் கூறுவதும், நூற்றுக்கணக்கான வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிப்பதும், அய்நூற்றுக்கணக்கான மாலைகள் போடுவதும், ஆயிரக்கணக்கான ருபாய்கள் கொடுப்பதுமான இந்தக் காரியங்கள் காங்கிரஸ் வீழ்ச்சிக்கும், பார்ப்பனீய வீழ்ச்சிக்கும் அறிகுறியல்லவா என்று கேட்கிறேன்.
எதைக் குறிக்கிறது?
நீங்கள் வாசித்தளிக்கும் வரவேற்பின் ஒவ்வொரு எழுத்தும், புள்ளியும், கமா குறியும் எதைக் குறிக்கின்றன? "இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை, காங்கிரசை, காந்திப் புரட்டை உடையுங்கள்; அழியுங்கள்; அழித்துக் கொளுத்திப் புதையுங்கள்" என்று கட்டளை இடுகிறது போலல்லவா காணப்படுகின்றன? நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும், காசும் என்ன கூறுகின்றன? "அய்யனே, இந்தப் பார்ப்பனீயக் கொடுமையிலிருந்து எங்களை விடுதலை செய்து மனிதத் தன்மையோடு வாழ்வதற்கு வகை செப்புங்கள்" என்று கெஞ்சி, அபயம் கொள்ளுவது போலல்லவா வந்து குவிகின்றன?
உங்கள் வாழ்த்துப் பேரொலிகள் எதைக் குறிப்பிடுகின்றன? என்னை வாழ்த்துக் கூறுவதன் மூலமே உங்கள் எதிரிகள் ஒழிந்தே போய்விட்டதாகக் கருதி, வெற்றி முழக்கம் செய்வது போலவே காணப்படுகின்றன,
இவைகளுக்காக நான் உங்களுக்குச் சொல்ல வேண்டிய பதில் என்ன?
தோழர்களே, இந்த 15- வருஷ காலமாக நான் கூறிவந்ததை இப்பொழுதாவது நீங்கள் மெய் என்றும், சரி என்றும் கருதுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்கின்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு உங்களுடைய ஆசைக்கும், எதிர் நோக்கிற்கும் ஒரு உண்மையான - மெய்யான தொண்டனாக இருந்து, நீங்கள் சிறிதும் மனக்குறை அடையாதவண்ணம் என்னாலான தொண்டைச் செய்கிறேன் என்று வாக்களிப்பதுதான் என்று கருதுகிறேன்.
நம்மை மிருகமாய் நடத்த காரணம் என்ன?
தோழர்களே, இன்று நாம் அதாவது, இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய நாம், இந்நாட்டை ஆண்டுவந்த அரச பின்வழியாகிய நாம், உலகத்தில் எந்த நாட்டினர்க்கும் பின்வாங்காத வீரம், மானம், அறிவு, ஆற்றல், கலை, நாகரீகம் ஆகியவைகளில் சிறந்த மக்களாகிய நாம், இன்று ஒரு சிறு கூட்டத்தாராகிய, அதுவும் இந்நாட்டுக்கு மலைக் காடுகளில் இருந்து கால்நடைகளுடன் பிழைக்க வந்த கூட்டமாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும், பிறராலும், ஆயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கி மிருகமாய் நடத்தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
வெள்ளையர் நம்மை அரசியலில் ஆளுகிறார் என்றால், அதற்காவது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். அதாவது, இந்தச் சூழ்ச்சியால் நாம் தமிழர்கள் - திராவிடர்கள் பல்வேறு சமயமாகவும், பல்வேறு மேல் - கீழ் சாதி வகுப்புகளாகவும், பல்வேறு லட்சியமுடையவர்களாகவும் ஆக்கப்பட்டு, கல்வி இல்லாமல், தன்முயற்சி இல்லாமல் நசுக்கப்பட்டு விட்டபடியால், கத்தி, துப்பாக்கி உள்ளவருக்கெல்லாம் பயந்து, அடிமையாகி ஆரியரால் நம் நாட்டிற்கு கூட்டி வரப்படுபவருக்கெல்லாம் குடி ஆகி அல்லல்பட்டு வருகிறோம்.
ஆனால், கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிமை கூட இல்லாத இந்த ஆரியர்களுக்கு, அரசியல், சமூக இயல், சமய இயல், பொருளாதார இயல், ஞான இயல் முதலாகியவைகளுக்கெல்லாம் நாம் உரிமை இல்லாமல் அடிமைப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கிறேன். அல்லது நம் நிலை தமிழ்நாடு தோன்றியது முதல், தமிழர் தோன்றியது முதல், இப்படித்தான் இருந்ததா என்று கேட்கிறேன்.
உண்மையைப் பாருங்கள்
சரித்திரத்தைப் பாருங்கள்; ஆராய்ச்சியாளர் கூறுவதன் உண்மையைப் பாருங்கள். உலகிலேயே முதல் முதல் தோன்றிய நாடு தமிழ்நாடு என்றும், உலகிலேயே மனிதவர்க்கம் தோன்றிய இடம் நம் தென்னாடு என்றும் கூறப்படவில்லையா? இந்த மாதிரி பூர்வீகப் பெருமைகளால், பழங்கதைகளால் நமக்கு ஆவது ஒன்றும் இல்லை என்றாலும் இப்படிப்பட்ட தமிழர்கள் ஏன் உலகில் இவ்வளவு கீழான நிலையிலும் இழிவான தன்மையிலும் இருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா என்பதற்காகவே இவற்றைக் கூறினேன்.
தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ்நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும், நாகரீகத்தையும் மறந்தான், தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும், உரிமையையும் இழந்தான்.
இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும், இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும், கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும், இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.
இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு விரோதமாகக் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. அவர்களது கூலிகளில் பலர் இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள் போல் நடிப்பதில் அதிசயமில்லை. ஆனாலும், அதைப்பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
நான் கூறி வந்தவைகளும், இப்போது கூறுவனவற்றிற்கும் ஆதாரமாகச் சரித்திரமும், அரிய ஆராய்ச்சி ஞானம் பெற்ற சரித்திர ஆசிரியர்களும் கூறி இருப்பதில் சிலவற்றை மாத்திரம் எடுத்துக்காட்டிவிட்டு இதுபற்றிய என் பேச்சை முடிக்கிறேன்; மற்றவர்களைப் பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளுகிறேன்.
ஆராய்ச்சியாளர் அபிப்பிராயம்
"தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும் அசுரர்கள் என்றும் ராமாயணக் கதையில் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது."
இது ரோமேஷ் சந்திரடட் C.I.E.I.C.S எழுதிய "புராதன இந்தியா" என்னும் புத்தகத்தில் 52-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"திராவிடர்கள் தங்கள் மீது படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரிய வேண்டி இருந்தது, இந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன."
இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜீம்தார் எம்.ஏ., யின் "பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரீகமும்" என்னும் புத்தகத்தின் 22- ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்திரித்துக் காட்டுவதாகும்."
இது பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய "திராவிடரும் ஆரியரும்" என்னும் புத்தகத்தின் 24-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியரல்லாதவர்களைக் குறிப்பதாகும்."
இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய "பண்டைய இந்தியாவின் நாகரீகம்" என்ற புத்தகத்தின் 139-141- ஆவது பக்கங்களில் இருக்கிறது.
"தென்னிந்தியாவில் இருந்த மக்களே தான் ராமாயணத்தின் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் ."
இது "சுவாமி விவேகானந்தா அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்" என்ற புத்தகத்தில் ராமாயணம் என்னும் தலைப்பில் 587-589- ஆவது பக்கங்களில் இருக்கின்றது.
"ஆரியன் என்கின்ற பதம் இந்தியாவின் புராதன குடி மக்களிடமிருந்து தங்களை பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்."
தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.
இது 1922- ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் "பழைய இந்தியாவின் சரித்திரம்" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.
பகைமைக்குக் காரணம்
"ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும் தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப்பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்."
இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எம்.ஏ., பி.எச்.டி., எழுதிய "இந்து நாகரீகம்" என்னும் புத்தகத்தில் 69- ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரீகத்திற்கும் ஆரியரல்லாத நாகரீகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன் - ராவணன் ஆகியவர்களால்) நடத்தப்பட்ட போராகும்."
இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ எழுதிய "இந்து நாகரீகம்" என்னும் புத்தகத்தில் 141-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும், இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும் பாஷை."
இது சர் - ஜேம்ஸ்மர்ரே எழுதிய புதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67டி-யில் இருக்கிறது.
"ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக்கொண்டு, அவர்களது நாகரீகத்தையும் பின்பற்ற வேண்டிவந்தன."
இது பண்டர்காரின் கட்டுரைகள், வால்யூம் 3, பக்கம் 10-இல் இருக்கிறது.
"தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்."
இது டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எம்.ஏ., பி.எச்.டி., அவர்கள் எழுதிய "தென் இந்தியாவும் இந்திய கலையும்" என்ற புத்தகத்தின் 3-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப்போலவே நாகரீகமடைந்தவர்களாய் இருந்தார்கள்."
இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய "இந்திய சரித்திரம் முதல் பாகம்" என்னும் புத்தகத்தில் 10-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரீகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக்கொண்டார்கள்."
இது ஷோஷி சந்தர்டட் எழுதிய "இந்தியா அன்றும் இன்றும்" என்னும் புத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
அசுரர்கள் யார்?
"ஆரிய கடவுள்களாகிய இந்திரனையும், இதர கடவுள்களையும் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப்பகை இருந்து கொண்டே வந்தது."
இது ஏ.ஸி. தாஸ் எம்.ஏ., பி.எல்., எழுதிய "ரிக் வேத காலத்து இந்தியா" என்னும் புத்தகத்தில் 151-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். "
"ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறு நுழைந்து ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்."
இது சி.எஸ். சீனிவாச்சாரி எம்.ஏ., & எம்.எஸ். ராமசாமி அய்யங்கார் எம்.ஏ., ஆகிய சரித்திர போதகர்கள் எழுதிய "இந்திய சரித்திரம் முதல் பாகம்" என்னும் புத்தகத்தில் "இந்து இந்தியா" என்னும் தலைப்பில் 16,17- ஆவது பக்கங்களில் இருக்கிறது.
"ஆரியர்களில் சம்ஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கனவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்."
இது எச்.ஜி. வெல்ஸ் எழுதிய "உலகத்தின் சிறு சரித்திரம்" என்னும் புத்தகத்தின் 105-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்."
இது "New Age Encyclopedia" (நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா Vol.II.(1925) பக்கம் - 273-ல் இருக்கிறது.
ராமாயணம் எதைக் காட்டுகிறது?
"ராமாயணம், தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்."
இது முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் சி.ஜே.வர்க்கி எம்.ஏ., எழுதிய "இந்திய சரித்திர பாகுபாடு" என்னும் புத்தகத்தின் 15-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக் கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவைகளாகும்."
இது "பார்ப்பன துவேஷி" ராமசாமியால் எழுதப்பட்டதல்ல, பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865- இல் எழுதின "விரிவான இந்திய சரித்திரம் முதற் பாகம்" என்னும் புத்தகத்தில் 15- ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"விஷ்ணு என்கின்ற கடவள் ஆரியக்கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக்கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது."
இது கி.பி. ஹாவெல் 1918-இல் எழுதிய "இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்" என்னும் புத்தகத்தின் 32-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"பாரத ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்ல ாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியேயாகும்."
இது ஜி.எச்.ராபின்சன் சி.அய்.ஈ.யால் எழுதின "இந்தியா" என்னும் புத்தகத்தின் 155-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
வட இந்திய திராவிடக் கலை
"வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரீகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை."
இது தமிழ்ப் பேராசிரியர் கே.என். சிவராஜ பிள்ளை பி.ஏ., எழுதிய "பண்டைத் தமிழர்களின் வரலாறு" என்னும் புத்தகத்தின் 4-ஆம் பக்கத்தில் இருக்கிறது.
"பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையாகும்."
இது நாகேந்திரநாத்கோஷ் பி.ஏ., பி.எல்., எழுதிய "இந்திய ஆரியரின் இல்கியமும் கலையும்" என்ற புத்தகத்தின் 194-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"ராமாணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது."
இது ஹென்றி ஸ்மித் வில்லியம் எல்.எல்.டி., எழுதிய "சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்" வால்யூம் 2-இல் பக்கம் 521-இல் இருக்கிறது.
"இந்தியாவின் தென்பாகத்திலுள்ள நாடுகளைப் போல 'பிராமணர்கள்' வெற்றியோடு வரும்போது ஆந்திரர், சேரர், சோழர், பாண்டியர் ஆகிய நாடுகள் மிக்க நாகரீகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்."
இது வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய "இந்திய சரித்திரம்" 14-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
"இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்."
இது இம்பீரியல் இந்தியன் கெஜட்டியர் 1909-ஆம் வருஷத்திய பதிப்பு வால்யூம் 1-இல் 405-ஆவது பக்கத்தில் இருக்கிறது.
ஆரியரல்லாதார் பட்டபாடு
"ஆரியரல்லாத இந்நாட்டு பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும் ஆரிய புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள்.
இணைப்பு : அக்கினி புத்திரன் (மீண்டும் வருவான் )
மக்களின் இறுதி ஆணையும் ,முடிவும்
எம் பாசத்துக்கு உரிய தமிழீழ மக்களே ...!. எமது உரிமை போரடமானது பல சதாபதங்களை ,இழப்புகளை,துரோகங் களை கடந்து இன்று மிகவும் உலகளாவிய ரீதியில் பெரும் ஆலவிருசமாக விரிவடைந்து உலகமே வியட்கும் அளவிற்று விஸ்வருபம் எடுத்து வருகிறது .இதட்குக் முழுக்காரணமும் எமது தேசிய தலைமயின் உறுதியான எந்த விட்டுகொடுபுகளும் அற்ற கொள்கையும் ,அந்த கொள்கைக்கு முழுமையாக தலைவணங்கி அந்த தலைமயின் பின்னால் ஓரணியாக எழுச்சியாக பயணிக்கும் எமது புலம் பெயர் உறவுகளும் ,எமது தலைமையின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக சரியாக உணர்ந்து பௌதறிவு சிந்தனையுடன் மிகத்தெளிவாக எதிரியின் கோட்டைக்குள் இருந்து கொண்டு போராடிவரும் எமது தாயாக உறவுகளின் உறுதி தன்மையே மிகபெரிய கரணம் .இதட்கு மிகமிக பொருத்தமான இன்றைய இறுதி சான்று நடந்து முடிந்த இந்த பாராளுமன்ற தேர்தலே ஆகும் .
எந்த அடிப்படை உரிமைக் கொள்கைகளைக் கொண்ட தமிழீழ விடிவே ஒரே தீர்வு என்ற ஜனநாயகப் போராடத்தை தந்தை செல்வா அவர்கள் முன்னெடுக்கும் போது எமது மக்கள் ஒன்று திரண்டு ஆதரித்து ஆணை கொடுத்தார்களோ ....!, எந்த ஒரு விட்டு கொடுப்புகளும் இல்லாது எந்த கொள்கையில் தமது ஆயுதங்களை தாமாகவே மெளனிக்கும் வரை ஆயுதபோரடத்தையும் ,அரசியல் நகர்வையும் முனெடுத்த தமிழீழ விடுதலை புலிகள் முன்னால் அணி திரண்டார்களோ அதேகொள்கையிலும் ,அதே தலைமையிலும் மக்கள் இன்றுவரை மிகத்தெளிவாக இருக்கிறார்கள் .மிகத்தெளிவாக தமது உண்மையான தலைமை எது என்பதை மீண்டும் ஒருமுறை உலக்கும் ,ராஜதந்திரம் என்று பகிரங்கமாக சொல்லி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைமைகளுக்கு " எப்படி இருக்கிறது எமது இராஜதந்திரம் ...! "என மிகத்தெளிவாகக் காட்டி இருக்கிறார்கள் எமது தாயாக உறவுகள் அரசியல் என்ற தளத்தில் இருந்துகொண்டு தமது தலைமையின் கொள்கைவழியில் .
தமிழ் மக்களின் முழுமையான ஆணையைப் பெற்று ஆயுத ரீதியாகவும் ,அரசியல் ரீதியாகவும் போராடி உலகம் வியந்து நின்று அழிக்க முற்பட்ட ஒட்டுமொத்த உலகத்தமிழ் இனத்தின் ஒரே தேசிய இராணுவமே எமது தமிழீழ விடுதலை புலிகள் .அவர்களின் தலைமையினால் மிகவும் மதினுட்பமாக எதிரியின் கோட்டைக்குள் விடப்பட்ட மிகவும் பலம்பொருந்தி இருந்த அரசியல் மற்றும் அறிவியல் ஞானம் பெற்ற அமைப்புதான் தமிழ் தேசிய கூட்டமைப்பு .அவர்களுக்கு அன்று தொடக்கம் இன்று வரை க்கும் மக்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் வாக்கு என்னும் தமக்கு இன்று இருக்கும் ஒரே ஒரு உரிமை முலமாக ஆணை வழங்கி வருவது அந்த அமைப்பை உருவாக்கிய தமது தேசியத்தலைமை மீதான முழுமையான நம்பிக்கையே அன்றி வேறு எந்த காரணமும் இருக்கவே முடியாது.அது யாவரும் அறிந்த உண்மை .
இந்த தமிழ் தேசிய கூடமைப்பு விடுதலை புலிகள் களத்தில் இருக்கும் வரை தமது அடிபடைகொள்கையில் இருந்து சிறிதும் விலகாது செயல் பட்டுவந்தது உண்மையே .ஆனால் எப்பொழுது விடுதலைபுலிகளின் ஆயுதபோராட்டம் முற்றாக முடிகபட்ட மாயாத் தோற்றம் ஏற்பட்டதோ அன்றில் இருந்து இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது அடிபடைகொள்கையில் இருந்து விலகுவது போன்ற தோற்றம் இன்றுவரை காட்டிவருகிறது .அதனை உணராது மக்களை தடுபதட்காக அல்லது உண்மையாக தமது அரசியல் நகர்வை சரிவரச் செய்வதட்க்கோ மக்கள் முன் தனது கொள்கையை இராஜதந்திர நகர்வு என்பதை எடுத்து உரைத்துவருகிறது .இது ஒரு புதிய குழப்பமே ...!.
அரசியல் போராட்டமும் ,ஆயுத போராட்டமும் இரண்டும் சற்று வேறு வேறு பட்டவையே .ஆயுத போராடமனது தனியே உறுதியான ஒரு கொள்கையின் படி ஒரேவழியில் பயணிக்கக் கூடியது .ஆனால் அரசியல் என்பது பலவழிகளில் சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப வளைந்தும் ,நெளிந்தும் ,பணிந்தும் ,வேண்டிய இடத்தில விலைபோகியும் தமது இலக்கை அடைய வேண்டிய ஒரு சிக்கல் மிக்க ஒருதளம் தான் .அதனால் தான் அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று முன்மொழியப்பட்டு வழி மொழியப்படுகிறது.அதட்காக நான் தமிழ் தேசிய கூட்டமைப்பை இன்று ஆதரிக்கிறேன் என்று அர்த்தமில்லை .அரசியலின் உண்மை தன்மையை எது என்பதை சொல்லுகிறேன் .நியாயபடுதவில்லை .
எந்த ஒரு உயரிய நோக்கத்துக்காக மிகவும் சிரமப்பட்டு மிகத்திறமையாக உலகம் வியக்க எமது தேசிய தலைமையால் உருவாகக்கபட்ட மிகவும் அரசியல் தனிபலம் கொண்ட இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று கொள்கைரீதியாக என்று வெளித் தோற்றத்துக்குக் காரணம் கட்டிக்கொண்டு பல பிரிவுகளாக பிளவு பட்டு எம்மை இடியாக நிலைகுலைய வைத்துள்ளது இன்று .ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி கரிபூசியா படியே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்மொழிந்தார்கள்.எதிரி எதனை உருவாக்க துடிதானோ ,அதனை தாமே உருவாக்கியபடி எமது புலம்பெயர் உறவுகளையும் ,எதிரியின் கோட்டைக்குள் இருந்து தினம் தினம் தினறிக்கொண்டு இருக்கும் எம் தாயாக உறவுகளையும் தாமே குழப்ப முன்வந்து செயல் பட்டுக் கொண்டு இருந்தனர் .இன்னமும் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் தமது வார்த்தை ஜாலங்களால் இணையதளங்கள் முலமாக .ஆனால் எமது மக்கள் எத்தனை இன்னல்களையும் ,துரோகங்களையும் மாறி மாறி தொடர்சியாக அனுபவித்தாலும் தமது முடிவை அன்று தொடக்கம் இன்றுவரை மிகத் தெளிவாக நேரடியாகவும் ,இராஜதந்திரமாகவும் உலகிற்கும் ,சம்பந்தபட்ட தரப்பிற்கும் தெரிவித்தே வருகிறார்கள் .
புலிகளை ஒட்டுமொத்த உலகமும் ,இலங்கை அரசாங்கமும் முற்றாக அழித்தது விட்டதாக சொல்லி மார்பு அடித்து கொண்டிருந்த வேளை எந்த இலட்சியத்துக்காக தமது கைகளில் ஆயுதம் ஏந்தி உரிமைபோரடத்தை தொடர்ந்தார்களோ புலிகள் அந்த இலட்சியதைகொண்ட ,அன்று தந்தை செல்வாவால் மக்கள் ஆணையுடன் நிறைவேற்றிய வட்டுகோட்டை தீர்மானத்தை உலகு எங்கும் வீச்சாக ,உறுதியோடு வேர்பரப்பி வாழும் எம் புலம்பெயர் உறவுகள் மீண்டும் ஒருமுறை உலகமே ஏன் இலங்கை அரசாங்கமே நடுநடுங்கும் அளவிற்கு தமது வாக்குகளை 98% அதிகமாக வழங்கி தமது வரலாற்று கடமைக்கு வலு சேர்த்து வருகிறார்கள் .
அதே போல் இன்னும் பலமடங்கு இராஜதந்திரமாக எதிரியின் கோட்டைக்குள் இருந்து கொண்டு பல அழிவுகள் துரோகங்களுகுள்ளும் ,குழப்பங்கள் உள்ளும் ஜனாதிபதி தேர்தலுக்கு தக்க பதிலடியையும் கொடுத்த எமது தாயாக உறவுகள் .இன்றும் மிகத்தெளிவாக தமது பதிலை இந்த நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெளிகாட்டி நிக்கின்றனர் .அது என்ன செய்தி ...!? இதுதான் அது .
" நாம் உங்கள் மீது நம்பிக்கையும் ,உறுதியும் வைத்து இருந்தோம் இறுதிவரை .எதுக்காக ? எமது தேசிய தலைமையினால் உருவாக்கபட்ட உறுதியான எமது இலட்சிய கொள்கைபிசகாத விலை போகாத அரசியல் கட்சி என்பதால் .ஆனால் எமது தேசிய தலைமை மறைகபட்டார்கள் என்ற மாயை தோன்றியதும் நீங்கள் நீங்களாக இல்லாது எமது அடிப்படை உரிமை மற்றும் இலட்சிய கனவு என்பவற்றில் இருந்து விலகியும், எம்மையும் வசிய படுத்த நீங்கள் அரசியல் இலாபம் ஈட்டவும் நாம் இராஜதந்திர நகர்வை மேற்கொள்கிறோம் என்று கூறிவருகிறீர்கள் .எங்களை குழப்பி எமது போராட்ட சக்தியை மழுங்கடிக்க செயல் பட்டு வருகிறீர்கள் .ஆனாலும் 65 வருடங்களாக எல்லாவிதமான துன்பங்களையும் ,இழப்புகளையும் ,துரோகங்களையும் நன்றாகவே மக்கள் ஆகிய நாம் எமது தேசிய தலைமை ஊடாக கற்று தெளிந்து உள்ளோம் .நாம் ஒன்றும்Currentகும் ,TVக்கும் விலைபோகும் தமிழ்நாட்டு பகுத்தறிவு அற்ற மக்கள் கிடையாது .உங்களின் பருப்பு எங்களிடம் வேகாது நாமும் அறிவாலும் ,பிறப்பாலும் நியமான புலிகள் .என்று மீண்டும் ஒரு முறை உங்களில் ஒருபகுதியினரை ஓரம் கட்டியும் ,மற்றைய பகுதியினருக்கு இறுதி சந்தர்பத்தை மிகச்சிறிய வாக்குகளால் தந்தும் ,எப்போதும் எங்கள் ஏக பிரதிநிதிகள் நீங்கள் அல்ல எமக்காக உண்மையாக போராடும் எமது தேசிய இராணுவம் எமது புலிகளே ...! என்பதை நாம் இன்று எதிரியின் கோட்டைக்குள் இருந்து 85%க்கும் அதிகமான மக்கள் இத் தேர்தலை இராஜதந்திரமாக புறக்கணித்து எமது அரசியல் சானகியத்தை நாம் மீள நிருபித்து எமது புலம்பெயர் உறவுகளுடன் சேர்த்து பயணிக்கிறோம் மீண்டும் எமது இறுதி இலக்குவரை உறுதியுடன் என்பததை நிருபித்து உள்ளோம் . இந்த எமது இராஜதந்திர நகர்வு என்பது எமது பௌதாய்வு செய்து பயணிக்கும் எமது பௌக்தறிவே என்பது இதன் முழு அர்த்தம் .
இதில் ஒரு கேள்வி ஏழுகிறது .அது பலராலும் ஏற்றுகொள்ள முடியாத திணறும் ஆசாரியமான உண்மை.அதுதான் தமிழ் தேசிய கூடமைபில் இருந்து முற்றாக விலகி அல்லது தமிழ் தேசிய கூடமைப்பால் ஓரம் கட்டபட்ட புதிதாக முளைத்த தமிழ் தேசியதுக்கான மக்கள் முன்னணி என்ற அரசியல் அமைப்பு .அவர்களை ஏன் மக்களும் முழுமையாக ஓரம் கட்டினார்கள் ?
மக்களின் பார்வையில்" தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணி ஆகிய நீங்கள் தீடீர் என்று பிரிந்து ,தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது அடிப்படை கொள்கையில் இருந்து முற்றாக விலகி விட்டது ,அதனால் தான் நாம் அதில் இருந்து முற்றாக விலகி விட்டோம் .ஆனால் நாம் அந்த அடிபடைகொள்கையினையே நாம் எமது தேர்தல் பிரசாரமாக முன்வைக்கிறோம் நீங்கள் அந்த உண்மையினை புரிந்து எமக்கு ஆணை தாருங்கள் என்கிறீர்கள் .ஆனால் மக்கள் ஆகிய நாம் சரியான பதிலை இப்போது உங்களுக்கும் தந்துள்ளோம் .அது என்ன?உங்களின் உறுதியை மதிக்கிறோம் .ஆனால் நீங்கள் இன்னமும் செயலால் வளரவில்லை .செயலால் வளர்ந்தபின் எம்முடன் இவ்வாறு பேசுங்கள் .உங்களுக்கு நாம் ஆணை தருகிறோம் அன்று .இப்போது நீங்கள் நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் .நீங்கள் விஷ காளான்களா அல்லது நியகாளங்களா என்று சரியாக சொல்ல எமது தேசிய தலைமை தற்போது இங்கு களத்தில் இல்லை .அதனால் நம்பிக்கையுடன் உங்களுக்கு உடனடியாக எமது பலத்தை தரமுடியாது .ஏன் எனில் " நாம் அரசியல் வாதிகள் அல்ல புரட்சி வாதிகள் " என்ற தேசிய தலைமையின் சிந்தனையை இன்று செயல் வடிவமாக்கி உள்ளோம் உங்களுக்கும் சேர்த்து என்பதே உண்மை " என்று ஆணித்தரமாக இடித்து உரைத்துள்ளனர் எம் தாயாக மக்கள் இத் தேர்தலில் தமது வாக்குகளால் .
அதே நேரம் "தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் இன்னமும் நம்பவில்லை ஆனாலும் மரியாதை வைத்து உள்ளோம் .எதற்க்காக எமது தேசிய தலைமை உருவாகிய ஒருபலம் பொருந்திய அமைப்பு .ஒருவேளை நீங்கள் இராஜதந்திர நகர்வை மேற்கொளுவீர்கள் என்று 18%க்கும் குறைவான வாக்குகளால் உங்களுக்கு மீண்டும் ஆணை தந்து உள்ளோம் .ஆனால் உங்களை எமது ஏக பிரதிநிதிகளாக நினைக்கவில்லை .இந்த சந்தர்பத்தை கைவிடாது எதிரிகளுக்கும் ,துரோகிகளுக்கும் விலை போகாது ஈடு இணையற்ற எமது போராடத்தை விற்காது செயல் படவேண்டும் என்று இறுதியாக உங்களுக்கு உயிர் பிச்சை தந்து உள்ளோம் .அதே நேரம் 85% அதிகமான மக்களால் இந்த தேர்தல் முற்று முழுதாக புறக்கனிகபட்டு நாம் விடுதலை புலிகளை தவிர எந்த தலைமையுமோ அல்லது எந்த ஜனநாயக கொள்கையுமோ ஆதரிக்காது முற்றாக எதிர்க்கிறோம் .எமது தீர்ப்பு தனிநாடு ஒன்றுதான் என்பதை மிகவும் இராஜதந்திர ரீதியாக உலகுக்கும் ,சம்பந்த பட்ட தரப்புக்கும் ,இலங்கை அரசாங்கத்துக்கும் எதிரியின் கோட்டையில் இருந்து இடித்து உரைக்கிறோம் .என்பதுதான் உண்மை ".எமது மக்களின் அரசியல் மற்றும் அறிவியல் இராஜதந்திர போக்கை கண்டு இன்று இலங்கை அரசாங்கமும் ,எம்மை அழிக்க துடிக்கும் உலகமும் மீண்டும் ஒருமுறை கதிகலங்கி நிக்கின்றது செய்வது அறியாது .
எந்த உண்மையை சரிவர அறியாமல் ,அரசியல் ஞானம் அற்று பிதற்றி கொண்டு பக்கசார்பாக செயல் படும் " தமிழ்வின் " போன்ற இணைய தளங்கள் " வடகிழக்கு மக்கள் படித்தவர்கள் ,அறிவாளிகள் என்று எல்லோராலும் போற்ற பட்டவர்கள் .ஆனால் தேர்தலை பெரும்பாலானோர் புறக்கணித்து விட்டதால் புத்திஜீவிகள் எல்லோரும் விசனம் அடைகிறார்களாம் "என்று பக்க சார்பாக மக்கள் மீது பழிபோடுவது மிகவும் கீழ் தரமான ஒரு செயல் என்பதை வன்மையாக சுட்டிகாட்ட விரும்புகிறேன் .எதிரி என்னதான் கலாசார சீரழிவுகளையும் ,அரசியல் நகர்வுகளையும் ,வன்முறைகளையும் எம் மக்கள் மீது திணித்தாலும் எம் மக்கள் அன்றும் சரி ,இன்றும் சரி விலை போகவில்லை .விலை போகவும் மாட்டார்கள் .தமது உரிமைக்காக தொடர்ந்து போராடுவார்கள் என்பதை இன்றைய உலகுக்கான இந்த நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மக்களின் இறுதி முடிவும் ,ஆணையும் .அவர்களின் தலைமை எப்போதும் என்றும் புலிகளே .அவர்களின் நகர்வும் அவர் தன் வழியே .தமிழீழத்தின் கதவுகள் இன்று இரு துருவங்களாக மாற்ற பட்டு விட்டது .தாயாக மக்களின் தன்னிகர் அற்ற துணிவும் துல்லியமான அரசியல ராஜதந்திர நகர்வும் ,அடுத்து இரண்டாவதாக புலம்பெயர் உறவுகள் உடன் இணைந்த உலக தமிழரின் பேர் எழுச்சியும் ,வீரம் செறிந்த நுட்பமான வரலாறு போராட முன் எடுபுகளும் .
இது தொடரும் ,தொடரவேண்டும் .இதனை மனதில் கொண்டு மக்கள் தந்த ஆணையை தமிழ் தேசிய கூட்டமைப்பும் ,மக்கள் தந்த தீர்ப்பை தமிழ் தேசியத்துக்கான மக்கள் முன்னணியும் எடுத்து சரியாக நோக்கி மீண்டும் ஒருமுறை ஒன்றாக ஒற்றுமையுடன் பயணிகவேண்டியது இன்றைய காலத்தின் களத்தின் கட்டாயம் .இல்லையேல்" நாம் யாரயும் ஏமாற்றவும் இல்லை ,துரோகம் இழைக்கவும் இல்லை .ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் ,நாம் பதில் அடிகொடுக்க தயங்க மாட்டோம் " என்ற தேசிய தலைமையின் சிந்தனை செயல் வடிவமாகும் என்பது மக்களின் கடைசி எச்சரிக்கையும் ,முடிவும் கூட .
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
நன்றி
ஆக்கம் உங்கள் அக்கினி புத்திரன் (மீண்டும் வருவான் )
சிங்க தேசமும் நரிகளும்....!
அதிய மலை எனும் நாட்டின் அடி நாடாக விளங்கிய நாடு தான் சிங்க தேசம்.
இங்கே சிங்க தேசத்தில் ஆட்டங்களும் பாட்டங்களுக்கும் குறைவே இல்லை. ஆட்டம் பாட்டம் நடந்தால் தான் குடிமக்கள் வாழலாம் என்ற நிலையில் குடிகளும் அதையே விரும்பிநின்றது. திருவிழா காலம் ஆதலால் வேட்டை ராஜாக்களும் பட்டை அணிந்து பவ்வியமாக கோவில் வந்து சேர்ந்தார்கள். சிங்க தேசத்து அரண்மனையில் அதிய மலை ஆசியுடன் நரிகள் புலிகள் ஆகின
புலிகள் நரிகள் ஆக்கப்பட்டன.
புலிகள் ஆகிய நரிகள் பசி எடுக்க ஊளை இட்டு தன்னை காட்டி கொடுத்துவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. பசிகொண்டு நின்ற முயல்கள்
புலி தேசத்தை மறந்தோ புரிந்து கொள்ளாமலோ நரிகளிடம் ஏமாந்து கொள்கின்றதே உண்மை. பசி காக்க நரியிடம் ஏமார்ந்த முயல்கள் வாழ்ந்த வளை இல்லாது போக கடல் கடந்து உயிர் காக்க ஓடலாம்
இல்லையேல் புலித்தேவன் தான் ஒரே வழி என்று கூக்குரல் இடவும் கூடும். இல்லையேல் முயல் முயலாக இல்லாது நரியாக மாறி இறுதியில் சிங்கமாக தான் மாற வேண்டும். இதுவே சிங்கதேச ராஜாவின் தந்திரமும் ஆகும்.
இதைத் அறியா நரியாரும் தனக்குத் தான் தந்திரம் தெரியும் என்று எண்ணி நின்றது. பாவம் நரியார் இறுதியில் முயல்களால் அடித்திகலைக்கப்பட்டதே உண்மை ஆனது. முயல்கள் மீண்டும் கூடி புலித்தேவனை வேண்டி நிற்ப்பார்கள். அவ்வேளை புலித்தேவன் வந்து புலி தேசம் மீட்டு தருவாரா இல்லை
முயல்கள் கடல் கடந்து அனாதியாகி நிற்கவேண்டியது தானா?
இங்கே சிங்க தேசத்தில் ஆட்டங்களும் பாட்டங்களுக்கும் குறைவே இல்லை. ஆட்டம் பாட்டம் நடந்தால் தான் குடிமக்கள் வாழலாம் என்ற நிலையில் குடிகளும் அதையே விரும்பிநின்றது. திருவிழா காலம் ஆதலால் வேட்டை ராஜாக்களும் பட்டை அணிந்து பவ்வியமாக கோவில் வந்து சேர்ந்தார்கள். சிங்க தேசத்து அரண்மனையில் அதிய மலை ஆசியுடன் நரிகள் புலிகள் ஆகின
புலிகள் நரிகள் ஆக்கப்பட்டன.
புலிகள் ஆகிய நரிகள் பசி எடுக்க ஊளை இட்டு தன்னை காட்டி கொடுத்துவிடும் காலம் வெகு தொலைவில் இல்லை. பசிகொண்டு நின்ற முயல்கள்
புலி தேசத்தை மறந்தோ புரிந்து கொள்ளாமலோ நரிகளிடம் ஏமாந்து கொள்கின்றதே உண்மை. பசி காக்க நரியிடம் ஏமார்ந்த முயல்கள் வாழ்ந்த வளை இல்லாது போக கடல் கடந்து உயிர் காக்க ஓடலாம்
இல்லையேல் புலித்தேவன் தான் ஒரே வழி என்று கூக்குரல் இடவும் கூடும். இல்லையேல் முயல் முயலாக இல்லாது நரியாக மாறி இறுதியில் சிங்கமாக தான் மாற வேண்டும். இதுவே சிங்கதேச ராஜாவின் தந்திரமும் ஆகும்.
இதைத் அறியா நரியாரும் தனக்குத் தான் தந்திரம் தெரியும் என்று எண்ணி நின்றது. பாவம் நரியார் இறுதியில் முயல்களால் அடித்திகலைக்கப்பட்டதே உண்மை ஆனது. முயல்கள் மீண்டும் கூடி புலித்தேவனை வேண்டி நிற்ப்பார்கள். அவ்வேளை புலித்தேவன் வந்து புலி தேசம் மீட்டு தருவாரா இல்லை
முயல்கள் கடல் கடந்து அனாதியாகி நிற்கவேண்டியது தானா?
முடிவு விடுகதைப் புதிர் இல்லாது முடிகவேண்டியது முயல்கள் ஆகிய உங்கள் கைகளில் இன்று.
- ஆக்கம் ஜெயந்தன் பரா -
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் மாற்றான் குடியல்ல
புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகம் மாற்றான் குடியல்ல; உங்கள் இரத்த உறவுகளே
புலம்பெயரந்தவர்கள் ஒன்றும் கூண்டோடு குடிபெயர்ந்தவர்கள் அல்ல. சராசரி ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனுக்கும் பாதிக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஈழத்திலுண்டு. அதனால் தான் அவன் உணர்வுகொண்டு வீதிகளில் இறங்கிப் போராடுகிறான். புலத்தில் இருந்து கொண்டு வாக்குப் போடுவர்களை திசை திருப்பி தமிழர் ஒற்றுமைகளைக் குலைக்கிறோம் என்பது அபத்தம். அங்குள்ளவர்களுக்குத் தெரியும் யாருக்கு வாக்குப் போட வேண்டுமென்று. எமது உறவுகளுக்கு எமது கருத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். சிங்களத்தின் காலை நக்கிப் பிழைக்க நினைக்கும் ஒரு சிறிய கூட்டம் தான் வெறும் அச்சத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் புலம்பெயர் சமூகம் மீது ஏவப் பார்க்கின்றது. இதற்காக நாங்காள் வாளா இருக்க நாம் ஒன்றும் உணர்வற்றவர்களல்ல. தொடர்ந்தும் எம்மின விடுதலைக்காகவும் வளர்ச்சிக்காகவும் அர்ப்பணிப்புடன் உழைப்போம்.
புலம்பெயர்ந்தவங்களால் தான் white van கடத்தல், கொலை, கற்பழிப்பு எல்லாம் சிங்களவங்க செய்றாங்க. சிங்களவங்கள் நல்லவங்க; அவர்கள் காலை நக்கினால் எல்லாப் பிரச்சினையும் தீர்ந்திடும்... முடியலப்பா.... முடியல... சில நக்கிப்பிழைக்கும் நாய்களின் தொல்லைகளைக் கேட்க. புலம்பெயர்ந்த சமூகம் உயிரையும், உணர்வையும், உழைப்பையும் கொடுத்தள்ள சமூகம். தமிழின விடிவுக்குக் குரல் கொடுக்க சகல உரிமைகளும் எங்களுக்குண்டு.எங்கள் சராசரி குடும்பங்களில் 2/3 பேர் ஈழத்தில் இன்றும் உள்ளனர். ஒவ்வொரு புலம்பெயர்ந்தவனுக்கும் பாதிக்கு மேற்பட்ட உறவுகள் ஈழத்தில் வாழ்கிறார்கள். புலம்பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளே. நாளை எம்மினத்திற்குத் துயரென்றால் எந்த இடர்களுக்கும் மத்தியில் வீதியில் இறங்கிப் போராடத் தயங்கமாட்டோம். இங்குள்ள காவற்துறைகளிடம் அடி வாங்கியிருக்கிறோம், இங்குள்ள மக்கள் நாம் விதியில் இறங்கியதால் வந்த அசெளகரியங்களால் எம்மீது காறி உமிழ்ந்துள்ளனர், உயிரைக் கொடுத்துள்ளோம், உணர்வையும் உழைப்பையும் கொடுத்துள்ளோம், தொடர் போராட்டத்தால் மாணவர்கள் ஒருவருடக் கல்வியை இழந்துள்ளார்கள். புலம்பெயர்ந்தவன் எல்லாம் நிம்மதியாக ஏக, போக வாழ்வு வாழ்கிறான் என்று நினைக்க வேண்டாம். நாமும் உங்கள் உறவுகளே.
தமக்கான ஆயுத பலத்தையும், தம் பாதுகாவலர்களையும் இழந்த ஈழத் தமிழர்கள் வாய்திறந்து பேச முடியாத நிலையில் மீண்டும் ஆயுத முனையில் அடிமைப்படுதத்தப் பட்டுள்ளார்கள்.
ஆயுத பலம் சிதைக்கப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்களுக்கான போராடும் சக்தியாக புலம்பெயர் தமிழர்கள் உள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் முக்கியத்துவம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுவது ஈழத் தமிழர்களை மீண்டும் அடிமை நிலையில் வைத்திருக்க எண்ணும் சிங்கள அரசுக்கு பெரும் வாய்ப்பாக உள்ளது. எந்த அழுத்தங்களுக்கும் உட்படாத தமிழ்ச் சமூகம் ஒன்று புலம்பெயர் நாடுகளில் பலம் பெற்று வருவது பல அதிகார மையங்களுக்கும் அச்சத்தைக் கொடுப்பதாகவே உள்ளது. எம் தேசம் விடியும் வரை நாம் ஓயோம்.தமிழின விடிவிற்காகவும் வளர்ச்சிக்காகவும் வாருங்கள் இணைவோம்; ஒன்றுபட்டு தமிழின விடிவுக்காக உழைப்போம்.
ஆக்கம் சூரியா
இணைப்பு அக்கினி புத்திரன்
மகிந்தாவுக்கு முடிவுரை.....!
பூமி உருண்டையானது. அது மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டே தாமும் இயங்கிக் கொண்டு, வரலாற்றையும் இயக்கிக் கொண்டிருக்கும் தன்மை வாய்ந்தது. இந்த இயக்கத்தில் பல்வேறு நிகழ்வுகள், அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கலாம். சில நிகழ்வுகள் வியப்பை தந்திருக்கலாம். சில அச்சத்தையும், வேறு சில மகிழ்வையும் விளைவித்திருக்கலாம். இவை அனைத்தும் மாறி மாறி நிகழ வேண்டும் என்பது ஒரு நியதி. மாற்றங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. கால ஓட்டத்தில் அனைத்தும் கலந்து அடித்துச் செல்லப்படும். அவைகளின் திடமான பதிவுகள் வரலாறாய் நிலைத்து நிற்கும். அந்த அடிப்படையில்தான் பல்வேறு சம்பவங்கள் நமக்கு நினைவுகளாய் நிலைத்து விடுகின்றன. அவை நாம் விரும்பினாலும் மனங்களைவிட்டு அகன்று போகவில்லை. இது கால, சமூக கட்டமைப்பிற்கு ஏற்றவாறு மாந்தகுலம் ஏற்று, அனுபவித்துவரும் ஒரு இயக்கவியல் கோட்பாடு. இதிலிருந்து யாராலும் மீற முடியாது. இதிலிருந்து ஒருவரும் தப்பித்துச் செல்ல முடியாது.
எந்த மனிதனும் இயந்திரத்தனமாக வாழ்வதற்கு காலம் அனுமதிப்பதில்லை. அழுகையும், சிரிப்பும், கவலையும், மகிழ்வும் கலந்து தான் காலம் நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் அழுத காலம் நிறைவு பெறத் தொடங்கிவிட்டது. நமது சிரிப்பின் காலம் தொடங்கிவிட்டது. நமது தேசிய தலைவரின் ஆழ்ந்த அரசியல் அறிவு, அதன் அடிப்படை நகர்வுகள் சிங்கள பேரினவாத பேயாட்டத்தின் தத்துவார்த்த தவறுகளை நன்கு அறிந்த காரணத்தால் நாம், நமது கருவிகளை களத்தில் அமர செய்துவிட்டு, அவர்களுக்குள்ளான கருவி ஏந்தலை கணித்துக் கொடுத்திருக்கிறோம். மகிந்தா அரசு தமது மமதையான செயல்பாட்டால் தமிழீழத்தின்மீது தொடுத்த கடுஞ்சமர் இன்று ஒரு எல்லைக்கு வந்துவிட்டது. எந்த ஒரு பயணமும் முடிவற்றதாக இருக்க முடியாது. எந்த ஒரு நிகழ்வும் தொடர்ந்து நிகழப்போவது கிடையாது. கால அளவில் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
மகிந்தாவின் கொடுஞ்செயலுக்கான எல்லை, மகிந்தாவாலேயே வகுக்கப்பட்டுவிட்டது. தாம் எந்த அளவையால் அளந்தோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கின்ற கோட்பாட்டியல் மகிந்தாவின் வாழ்வில் உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தமிழீழ வரலாற்றை பெரும் எழுச்சிக்கு உள்ளாக்கிய மகிந்தா, உள்ளபடியே நமது வாழ்த்துக்குரியவர். ஒருவேளை தமிழீழ வரலாற்றின் இந்த துயர், அத்தியாயம் படைக்கப்படாமல் இருந்தால், உலகலாவிய பெரும் ஒத்துழைப்பு நமக்கு இந்த அளவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும். ஆனால் நமது சிந்தனை, தேசிய தலைவரின் வழிக்காட்டுதல், நாம் களமாடிய நேர்த்தி, நமது மாவீரர்களின் கனவு, நமக்கான தமிழ் தேசிய மண்ணை பெரும் வரலாற்று சிறப்போடு படைத்தளிக்க உறுதி அளித்திருக்கிறது.
கடந்த காலங்களில் நாம், ஒன்றுப்பட்ட தேசிய இனம் என்று மிகவும் ஆர்ப்பாட்டத்தோடு அறிவித்து, தேசிய அரசியல் பேசிய மகிந்தாவின் பொய் முகம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் சிலிர்த்தெழுந்து களம்காண தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சர்வாதிகாரியை வீழ்த்த வேண்டும் என்பதிலே சிங்கள ஜனநாயக பண்பு கொண்ட மக்கள், ஒரே அணியாய் திரண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானிலே மகிந்தாவை கண்டித்து சரத்தை விடுதலை செய்யக் கோரி, சிங்கள மக்கள் கோரிக்கை முழக்கம் செய்திருக்கிறார்கள். இது சிங்கள பேரினவாதி மகிந்தாவின் ஜனநாயக துரோகத்தை உலகநாடுகளில் அம்பலப்படுத்த பெரும் உதவிப் புரிந்தது. தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து மகிந்தா ஒரு போர் குற்றவாளி.
தமிழீழ மக்கள்மீது மகிந்தா நடத்திய தாக்குதல் இன அழிப்பு நடவடிக்கை என்றெல்லாம் உயர முழங்கியபோது, அந்த குரல்களை முடமாக்கிய மகிந்தாவின் பணம், அரசியல் நிலைப்பாடுகள் இப்போது சிதறி சின்னாபின்னமாகிப் போய் கொண்டிருக்கிறது. இலங்கையிலே சரத்தை விடுதலை செய்யக்கோரி புத்தபிக்குகள் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். சரத்தை விடுதலை செய் என்று புத்த பிக்குகள் எடுத்த போராட்டத்தின் அடையாளம் மகிந்தா ஒரு கொடுங்கோலன், அடக்குமுறையாளன். அவனை எதிர்த்து யார் பேசினாலும் எழுதினாலும் அல்லது கருத்துக் கூறினாலும் அவர்களை சிறையில் அல்ல, சிரமே தறிக்க தயங்கமாட்டான் என்பதை புத்த பிக்குகளின் போராட்டம் உறுதிபடுத்தி இருக்கிறது. எந்த புத்தபிக்குகள் சிங்கள-பௌத்தத்தை உயர்த்திப்பிடித்து, சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தாங்கி, அதற்கு எதிரான நிகழ்வு நடந்தபோது, அன்பைப்பற்றி போதித்த, புத்தனின் வழி வந்தவர்கள், மனிதக்கறியை கரத்தில் ஏந்திய கொடுஞ்செயலை செய்து முடித்தவர்கள், தமிழனின் குருதியை உடல் முழுக்க பூசி, உளவியல் ரீதியாக தம்மை அரக்கர்களாக பதிவு செய்து கொண்டார்கள்.
அப்படி, சிங்கள பேரினவாதத்தின் அரணாக இருக்கக்கூடிய புத்த பிக்குகள், இன்று சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் மகிந்தாவை எதிர்த்து களம் கண்டிருப்பது, இலங்கை-சிங்கள தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை உண்டாக்கப்போகிறது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. மகிந்தாவின் வீழ்ச்சி படிப்படியாய் தொடங்கிவிட்டதின் அடையாளம்தான் இன்று மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகிந்தா, சிங்கள பேரினவாதிகளை மட்டுமல்ல, தமிழின துரோகிகளை தமது பக்கத்தில் அமரச் செய்து, தமிழனை காயடிக்கும் அரசியலை செய்யப்புறப்பட்டு, அதற்கு எச்சில் துண்டுகளாக மந்திரி பதவிகளையும், பணத்தையும் வழங்கியதை வாலாட்டிக் கொண்டு, நாய் பிழைப்பு பிழைக்கும் இந்த நயவஞ்சக துரோகிகள், மகிந்தாவின் பக்கத்தில் சிரிக்க சிரிக்க நின்ற நிகழ்வுகள், இன்று தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எமது தேசிய ராணுவம் தமிழீழ பகுதிக்குள் நிலைக்கொண்டிருந்தவரை, தமிழீழ பகுதிக்குள் எட்டிப் பார்க்கக்கூட அச்சம் கொண்டிருந்த மகிந்தா, இன்று எமது தேசிய ராணுவம் இல்லாத தைரியத்தில் தமிழீழ மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்று, மூக்கறுப்பட்டு திரும்பி இருக்கிறார். பெருமளவில் ஆள்திரட்டி மகிந்தாவை குளிர செய்யலாம் என தமிழின துரோகிகள் போட்ட திட்டம் தவிடுப்பொடியாகி இருக்கிறது. மேடையிலேயே கோபப்பட்டு வெளிப்படுத்திய மகிந்தா, தமது சரிவை உறுதி செய்திருக்கிறார். தோல்வி காண்பவர்களுக்கும், எதிர்சமர் புரிய அச்சப்படுபவர்களுக்கும் தான் கோபம் என்பது இயல்பான உணர்ச்சியாக வெளிப்படும். மகிந்தா, அச்சத்திலிருப்பதின் வெளிப்பாடுதான், மேடையின்மீது மகிந்தா பட்ட கோபம் என்பது நமக்கு தெளிவாகிறது.
எமது பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். முட்டாளுக்கு மூன்று இடத்தில் மலம் என. காலில் மிதித்த மலத்தை கழுவிக் கொள்ளாமல் அதை கையிலே தொட்டு, மூக்கிலேயும் முகர்ந்து பார்க்கும் போக்கைத்தான் இப்படி ஒரு பழமொழியாக சொல்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த பழமொழி மகிந்தாவிற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. காரணம், தமிழீழ மக்களை கொன்றொழித்து, பெரும் வெற்றி கண்டதாக நினைத்து, தமிழ் பகுதிக்குச் சென்று மக்களின் சலனத்தை கண்டு எரிச்சலடைந்து, மேடையிலேயே மக்களை திட்டித்தீர்த்த அந்தப்போக்க, மகிந்தாவின் முட்டாள்தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றன. ஆக, எந்த ஒரு ஜனநாயகத்திற்கெதிரான மனிதனாக இருந்தாலும் அவன் நிச்சயமாக ஒருநாள் மாந்த குலத்தின் காலடியில் மண்டியிட்டேத் தீருவான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
அப்படி ஜனநாயகத்தை சிதைத்து, மாந்த குலத்தை ஒழிக்க முனைந்த பல கொடுங்கோலர்கள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. இப்போதும்கூட மகிந்தாவின் மமதை, மகிந்தாவின் வீழ்ச்சிக்கு அடையாளமாக, தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு தெரிவிக்கும் அடிப்படை செய்தி என்னதென்றால், உலக வரலாற்றில் மாந்த குலத்திற்கெதிரான ஆற்றல்களை ஒடுக்கிய மக்களின் பேராற்றல், மகிந்தாவிற்கெதிராக திசை திரும்ப தொடங்கியிருக்கிறது. இது, நடைபெறும் தேர்தலில் வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால் நாளடைவில் இது நிச்சயமாய் பெரும் எழுச்சியாய் மாறப்போகிறது. இந்த எழுச்சியை முறியடிக்க எந்த ஆதிக்க ஆற்றலாலும் முடியாது. மகிந்தாவின் முடிவுரைக்கு தொடக்கமே மகிந்தாவின் செயல்களாக அடையாளப்படுத்துகின்றன.
-கண்மணி-
மீள் பதிவு: கரும்புலிகள் உயிராயுதம்
இணைப்பு : அக்கினி புத்திரன்
எந்த மனிதனும் இயந்திரத்தனமாக வாழ்வதற்கு காலம் அனுமதிப்பதில்லை. அழுகையும், சிரிப்பும், கவலையும், மகிழ்வும் கலந்து தான் காலம் நம்மை அழைத்துச் செல்கிறது. நாம் அழுத காலம் நிறைவு பெறத் தொடங்கிவிட்டது. நமது சிரிப்பின் காலம் தொடங்கிவிட்டது. நமது தேசிய தலைவரின் ஆழ்ந்த அரசியல் அறிவு, அதன் அடிப்படை நகர்வுகள் சிங்கள பேரினவாத பேயாட்டத்தின் தத்துவார்த்த தவறுகளை நன்கு அறிந்த காரணத்தால் நாம், நமது கருவிகளை களத்தில் அமர செய்துவிட்டு, அவர்களுக்குள்ளான கருவி ஏந்தலை கணித்துக் கொடுத்திருக்கிறோம். மகிந்தா அரசு தமது மமதையான செயல்பாட்டால் தமிழீழத்தின்மீது தொடுத்த கடுஞ்சமர் இன்று ஒரு எல்லைக்கு வந்துவிட்டது. எந்த ஒரு பயணமும் முடிவற்றதாக இருக்க முடியாது. எந்த ஒரு நிகழ்வும் தொடர்ந்து நிகழப்போவது கிடையாது. கால அளவில் எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
மகிந்தாவின் கொடுஞ்செயலுக்கான எல்லை, மகிந்தாவாலேயே வகுக்கப்பட்டுவிட்டது. தாம் எந்த அளவையால் அளந்தோமோ அதே அளவையால் நமக்கும் அளக்கப்படும் என்கின்ற கோட்பாட்டியல் மகிந்தாவின் வாழ்வில் உண்மையாகிக் கொண்டிருக்கிறது. தமிழீழ வரலாற்றை பெரும் எழுச்சிக்கு உள்ளாக்கிய மகிந்தா, உள்ளபடியே நமது வாழ்த்துக்குரியவர். ஒருவேளை தமிழீழ வரலாற்றின் இந்த துயர், அத்தியாயம் படைக்கப்படாமல் இருந்தால், உலகலாவிய பெரும் ஒத்துழைப்பு நமக்கு இந்த அளவிற்கு கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்திருக்கும். ஆனால் நமது சிந்தனை, தேசிய தலைவரின் வழிக்காட்டுதல், நாம் களமாடிய நேர்த்தி, நமது மாவீரர்களின் கனவு, நமக்கான தமிழ் தேசிய மண்ணை பெரும் வரலாற்று சிறப்போடு படைத்தளிக்க உறுதி அளித்திருக்கிறது.
கடந்த காலங்களில் நாம், ஒன்றுப்பட்ட தேசிய இனம் என்று மிகவும் ஆர்ப்பாட்டத்தோடு அறிவித்து, தேசிய அரசியல் பேசிய மகிந்தாவின் பொய் முகம் கிழித்தெறியப்பட்டிருக்கிறது. மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் சிலிர்த்தெழுந்து களம்காண தொடங்கியிருக்கிறார்கள். ஒரு சர்வாதிகாரியை வீழ்த்த வேண்டும் என்பதிலே சிங்கள ஜனநாயக பண்பு கொண்ட மக்கள், ஒரே அணியாய் திரண்டிருக்கிறார்கள். அதன் அடையாளமாக கடந்த சில நாட்களுக்கு முன் ஜப்பானிலே மகிந்தாவை கண்டித்து சரத்தை விடுதலை செய்யக் கோரி, சிங்கள மக்கள் கோரிக்கை முழக்கம் செய்திருக்கிறார்கள். இது சிங்கள பேரினவாதி மகிந்தாவின் ஜனநாயக துரோகத்தை உலகநாடுகளில் அம்பலப்படுத்த பெரும் உதவிப் புரிந்தது. தமிழீழ மக்கள் ஒன்றிணைந்து மகிந்தா ஒரு போர் குற்றவாளி.
தமிழீழ மக்கள்மீது மகிந்தா நடத்திய தாக்குதல் இன அழிப்பு நடவடிக்கை என்றெல்லாம் உயர முழங்கியபோது, அந்த குரல்களை முடமாக்கிய மகிந்தாவின் பணம், அரசியல் நிலைப்பாடுகள் இப்போது சிதறி சின்னாபின்னமாகிப் போய் கொண்டிருக்கிறது. இலங்கையிலே சரத்தை விடுதலை செய்யக்கோரி புத்தபிக்குகள் உண்ணாநிலை போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். சரத்தை விடுதலை செய் என்று புத்த பிக்குகள் எடுத்த போராட்டத்தின் அடையாளம் மகிந்தா ஒரு கொடுங்கோலன், அடக்குமுறையாளன். அவனை எதிர்த்து யார் பேசினாலும் எழுதினாலும் அல்லது கருத்துக் கூறினாலும் அவர்களை சிறையில் அல்ல, சிரமே தறிக்க தயங்கமாட்டான் என்பதை புத்த பிக்குகளின் போராட்டம் உறுதிபடுத்தி இருக்கிறது. எந்த புத்தபிக்குகள் சிங்கள-பௌத்தத்தை உயர்த்திப்பிடித்து, சிங்கள-பௌத்த பேரினவாதத்தை தாங்கி, அதற்கு எதிரான நிகழ்வு நடந்தபோது, அன்பைப்பற்றி போதித்த, புத்தனின் வழி வந்தவர்கள், மனிதக்கறியை கரத்தில் ஏந்திய கொடுஞ்செயலை செய்து முடித்தவர்கள், தமிழனின் குருதியை உடல் முழுக்க பூசி, உளவியல் ரீதியாக தம்மை அரக்கர்களாக பதிவு செய்து கொண்டார்கள்.
அப்படி, சிங்கள பேரினவாதத்தின் அரணாக இருக்கக்கூடிய புத்த பிக்குகள், இன்று சிங்கள பேரினவாதத்திற்கு துணை நிற்கும் மகிந்தாவை எதிர்த்து களம் கண்டிருப்பது, இலங்கை-சிங்கள தேசிய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை உண்டாக்கப்போகிறது என்பதை நமக்கு தெரிவிக்கிறது. மகிந்தாவின் வீழ்ச்சி படிப்படியாய் தொடங்கிவிட்டதின் அடையாளம்தான் இன்று மகிந்தாவிற்கெதிராக சிங்கள மக்கள் தெருவுக்கு வந்து போராடத் தொடங்கியதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மகிந்தா, சிங்கள பேரினவாதிகளை மட்டுமல்ல, தமிழின துரோகிகளை தமது பக்கத்தில் அமரச் செய்து, தமிழனை காயடிக்கும் அரசியலை செய்யப்புறப்பட்டு, அதற்கு எச்சில் துண்டுகளாக மந்திரி பதவிகளையும், பணத்தையும் வழங்கியதை வாலாட்டிக் கொண்டு, நாய் பிழைப்பு பிழைக்கும் இந்த நயவஞ்சக துரோகிகள், மகிந்தாவின் பக்கத்தில் சிரிக்க சிரிக்க நின்ற நிகழ்வுகள், இன்று தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
எமது தேசிய ராணுவம் தமிழீழ பகுதிக்குள் நிலைக்கொண்டிருந்தவரை, தமிழீழ பகுதிக்குள் எட்டிப் பார்க்கக்கூட அச்சம் கொண்டிருந்த மகிந்தா, இன்று எமது தேசிய ராணுவம் இல்லாத தைரியத்தில் தமிழீழ மக்களிடம் வாக்கு சேகரிக்க சென்று, மூக்கறுப்பட்டு திரும்பி இருக்கிறார். பெருமளவில் ஆள்திரட்டி மகிந்தாவை குளிர செய்யலாம் என தமிழின துரோகிகள் போட்ட திட்டம் தவிடுப்பொடியாகி இருக்கிறது. மேடையிலேயே கோபப்பட்டு வெளிப்படுத்திய மகிந்தா, தமது சரிவை உறுதி செய்திருக்கிறார். தோல்வி காண்பவர்களுக்கும், எதிர்சமர் புரிய அச்சப்படுபவர்களுக்கும் தான் கோபம் என்பது இயல்பான உணர்ச்சியாக வெளிப்படும். மகிந்தா, அச்சத்திலிருப்பதின் வெளிப்பாடுதான், மேடையின்மீது மகிந்தா பட்ட கோபம் என்பது நமக்கு தெளிவாகிறது.
எமது பகுதிகளில் ஒரு பழமொழி சொல்வார்கள். முட்டாளுக்கு மூன்று இடத்தில் மலம் என. காலில் மிதித்த மலத்தை கழுவிக் கொள்ளாமல் அதை கையிலே தொட்டு, மூக்கிலேயும் முகர்ந்து பார்க்கும் போக்கைத்தான் இப்படி ஒரு பழமொழியாக சொல்வது வழக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. இந்த பழமொழி மகிந்தாவிற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. காரணம், தமிழீழ மக்களை கொன்றொழித்து, பெரும் வெற்றி கண்டதாக நினைத்து, தமிழ் பகுதிக்குச் சென்று மக்களின் சலனத்தை கண்டு எரிச்சலடைந்து, மேடையிலேயே மக்களை திட்டித்தீர்த்த அந்தப்போக்க, மகிந்தாவின் முட்டாள்தனத்தை தோலுரித்துக் காட்டுகின்றன. ஆக, எந்த ஒரு ஜனநாயகத்திற்கெதிரான மனிதனாக இருந்தாலும் அவன் நிச்சயமாக ஒருநாள் மாந்த குலத்தின் காலடியில் மண்டியிட்டேத் தீருவான் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது.
அப்படி ஜனநாயகத்தை சிதைத்து, மாந்த குலத்தை ஒழிக்க முனைந்த பல கொடுங்கோலர்கள் மக்களால் முறியடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கிறது. இப்போதும்கூட மகிந்தாவின் மமதை, மகிந்தாவின் வீழ்ச்சிக்கு அடையாளமாக, தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு தெரிவிக்கும் அடிப்படை செய்தி என்னதென்றால், உலக வரலாற்றில் மாந்த குலத்திற்கெதிரான ஆற்றல்களை ஒடுக்கிய மக்களின் பேராற்றல், மகிந்தாவிற்கெதிராக திசை திரும்ப தொடங்கியிருக்கிறது. இது, நடைபெறும் தேர்தலில் வெளிப்படாமல் இருக்கலாம். ஆனால் நாளடைவில் இது நிச்சயமாய் பெரும் எழுச்சியாய் மாறப்போகிறது. இந்த எழுச்சியை முறியடிக்க எந்த ஆதிக்க ஆற்றலாலும் முடியாது. மகிந்தாவின் முடிவுரைக்கு தொடக்கமே மகிந்தாவின் செயல்களாக அடையாளப்படுத்துகின்றன.
-கண்மணி-
மீள் பதிவு: கரும்புலிகள் உயிராயுதம்
இணைப்பு : அக்கினி புத்திரன்
எங்கள் செஞ்சோலைப் பிஞ்சுகள்
குருதியில்
தோய்ந்து கண்ணீரால்
கழுவப்படும் தமிழரின்
நீண்ட சோக வரலாற்றில்
`2006 ஆகஸ்ட் 14' ஈனர்
படைகளின் ஈவிரக்கமற்ற
தாக்குதல்களால்
பரிதாபகரமாகக்
கொல்லப்பட்ட 61
பிஞ்சுகளின் குருதியால்
எழுதப்பட்டுள்ளது.
நான்கு மாத பச்சிளம்
குழந்தையை கண்முன்னே துடித
ுடிக்க சுட்டுக்கொல்லும்
வெறிபிடித்த சிங்கள
ஆக்கிரமிப்பாளர்களுக்கு இத
ுவொரு பொருட்டாக
இல்லாது போனாலும் அழுது...
அழுது... ஆறமுடியாமல்
அகதிகளாய் அலையும்
தமிழினத்தால் இதைத்
தாங்கிக் கொள்ளும்
சக்தியில்லையென்றே கூறவேண்
டும்.
முல்லைத்தீவு மாவட்டம்
வல்லிபுனத்தில் `செஞ்சோலை'
சிறுமிகள் இல்லத்தின்
வளாகமொன்றுள்ளது. இந்த
வளாகமே கடந்த ஆகஸ்ட் 14
ஆம்
திகதி திங்கட்கிழமை காலை 7
மணியளவில் கண்மூடித்தனமான
வான்
தாக்குதல்களுக்கு இலக்காகி
யது. பேரினவாத அரச
படைகளின் நான்கு அதிவேக
யுத்த விமானங்கள்
மிலேச்சத்தனமாக வீசிய 16
குண்டுகளும் 61
பாடசாலை மாணவிகளின்
உயிர்களை பறித்ததுடன் 155
இற்கும் அதிகமான மாணவிகள்
படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில்
சிலரது உடல்கள்
சிதறியபடி காணப்பட்டன.
காயமடைந்தவர்களில் 25
மாணவிகளது நிலைமை கவலைக்கி
டமாகவுள்ளதாக
வைத்தியசாலை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் பலர்
அவயவங்களை இழந்திருப்பதாகவ
ும் சிலர் கைகள், கால்கள்
இரண்டையும்
இழந்திருப்பதாகவும்
கூறப்படுகிறது.
காயமடைந்தவர்கள்
முல்லைத்தீவு,
புதுக்குடியிருப்பு,
தர்மபுரம்,
கிளிநொச்சி ஆகிய
பொது வைத்தியசாலைகளிலும்
தனியார்
வைத்தியசாலைகளிலும்
உடனடியாக
அனுமதிக்கப்பட்டனர்.
தமது பிள்ளைகள்
தங்கியிருந்த
பகுதி மீது குண்டுத்
தாக்குதல்கள்
இடம்பெற்றதை அறிந்த
பெற்றோர்
அலறியடித்தவாறு செஞ்சோலை வ
ளாகத்துக்கு ஓடிவந்தனர்.
கொல்லப்பட்டவர்களில்
தமது பிள்ளையும்
உள்ளாளா என்ற ஏக்கத்துடன்
இறந்து கிடந்த மாணவிகளைத்
தேடிய குடும்பத்தினர்
கொல்லப்பட்ட
தமது பிள்ளை தான் என
தெரிந்ததும் கதறிய
கதறல்கள் அங்கிருந்த
அனைவரையும் அழவைத்தது.
"பத்து நாளும் என்னால
விட்டிட்டு இருக்க
ஏலாதுண்டு முதலில்
மாட்டேன் என்டுதான்
சொன்னன். ஆனால், நல்ல
விஷயம் எண்டு எல்லாரும்
சொன்னதால தான் விட்டனான்.
கடைசியில
இப்படியாப்போச்சு" என
தலையில் அடித்து கதறிய
தாயாரொருவர் தன் மகளைத்
தூக்கி வா வீட்ட போவோம் என
கேட்டதும் அனைவரும்
கதறியழுதனர்.
செஞ்சோலை வளாகத்தில்
அப்பாவி மாணவிகளை தறிகெட்ட
சிங்களப்
படை கொன்றது மாத்திரமல்லாம
ல் கொல்லப்பட்டவர்கள்
விடுதலைப் புலிகள்
இயக்கத்திலுள்ள சிறுவர்
போராளிகளெனக்
கூறி வெளியுலகுக்கு உண்மைய
ை மூடிமறைக்க
இனவெறி அரசாங்கம்
முயல்வது அனைவரையும்
ஆத்திரமடையச் செய்துள்ளது.
செஞ்சோலை வளாகம்
புலிகளின்
பயிற்சி முகாமெனவும்
அங்கு சிறுவயது போராளிகளே
இருந்ததாகவும் கூறி 2004
ஆம்
ஆண்டு தமது விமானமொன்று எட
ுத்த படமொன்றையும்
காட்டியுள்ளன
காட்டுமிராண்டிப் படைகள்.
இதைவிட ஒருபடி மேலே சென்ற
பேரினவாத அரசின்
அமைச்சரும்
பாதுகாப்பு நிலைவரம்
தொடர்பாக பேசவல்லவருமான
கெஹகிலிய
ரம்புக்வெல,"கொல்லப்பட்டத
ு சிறுவயது போராளிகள்.
அரசுக்கெதிராக செயற்படும்
எவராயினும் அதாவது வயது,
பால்
வேறுபாடின்றி கொல்வோம்" என
தமது அரசும்
இனவெறிபிடித்தே அலைகின்றது
என்பதனை பறைசாற்றினார்.
ஆனால், சம்பவ இடத்திற்கும்
வைத்தியசாலைகளும்
நேரடியாக
சென்று விசாரணைகளை மேற்கொண
்ட போர் நிறுத்த
கண்காணிப்புக் குழுவும்
`யுனிசெப்'பும்
கொல்லப்பட்டவர்கள்
அப்பாவி மாணவிகள்
என்பதனை வெளிப்படுத்தியது.
எனினும், தனது பொய்ப்
பிரசாரத்தை தொடர்ந்தும்
முன்னெடுத்து வருகின்றார்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.
ஊடக நிறுவனங்களின்
பிரதிநிதிகளை அழைத்த
ஜனாதிபதி இந்த
பொய்யையே மீண்டும்
கூறியுள்ளார். இதேவேளை,
இந்த
தாக்குதல்களுக்கு பழிக்குப
்
பழிவாங்கிவிடுவார்களென்ற
அச்சத்தில் தெற்கிலுள்ள
பாடசாலைகள்
மூடப்பட்டுள்ளன.
அப்படியானால்
அங்கே வல்லிபுனத்தில்
கொல்லப்பட்டவர்கள்
அப்பாவி தமிழ் மாணவிகள்
தான்
என்பதனை அரசு மறைமுகமாக
ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை
எவரும் இலகுவில்
புரிந்துகொள்வார்கள்.
பத்துநாள்
பயிற்சிப்பட்டறை
உண்மையில்
கொல்லப்பட்டவர்கள் யார்?
ஏன்
அங்கு கூடியிருந்தார்கள்?
காலை 7 மணிக்கு அவர்கள்
என்ன செய்தார்கள்?
முல்லைத்தீவு மாவட்டத்திலு
ள்ள வல்லிபுனம் மக்கள்
குடியிருப்புகள்
நெருக்கமாகவுள்ள பகுதி.
குடாநாட்டிலிருந்து 1995
இல்
இடம்பெயர்ந்து வன்னிக்கு ச
ென்றவர்களுக்கு இதை நன்கு
உணர்ந்து கொள்ளமுடியும்.
அங்கு தான் `செஞ்சோலை'
வளாகமும் உள்ளது.
செஞ்சோலை என்றதும்
தாயகத்தைச் சேர்ந்த
அனைவருக்கும் நன்றாக
தெரியும். இந்த
வளாகத்திலுள்ள அருகில் பல
நலன்புரி நிலையங்கள்,
வேறு பல சிறுவர் இல்லங்கள்
என பலவுள்ளன. மனிதநேய
நடவடிக்கைகள் நிறைந்த
ஒரு பகுதியே வல்லிபுனம்.
இந்த செஞ்சோலை வளாகத்தில்
தற்போது செஞ்சோலை சிறுமியர
் இல்லத்தைச்
சேர்ந்தவர்களில்லை. இந்த
வருடம் ஜனவரியில்
கிளிநொச்சியில்
அமைக்கப்பட்ட புதிய
வளாகத்துக்கு சிறுமியர்கள்
சென்றுவிட்டனர். ஆனால்,
வள்ளிபுனம் -
செஞ்சோலை வளாகம்
தொடர்ந்தும்
செஞ்சோலை வளாகமாகவே உள்ளது
. இங்கு வதிவிட
பயிற்சிப்பட்டறைகள்
நடாத்தப்படுவது வழமையானதொன
்று. காரணம்
ஏற்கனவே சிறுமியர்
இல்லமாக
இது செயற்பட்டமையால்
மாணவிகள்
தங்கியிருந்து பயிற்சிகளை
மேற்கொள்வதற்கு வசதியாக
இவ்வளாகம் இருப்பதே.
அத்துடன், இந்த வளாகம்
ஐ.நா. அமைப்புகளூடாக
பயிற்சிப் பட்டறைக்கான
இடமென
இலங்கை அரசாங்கத்தாலும்
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற பல காரணங்களால்
இங்க பல பயிற்சிப்
பட்டறைகள் நடைபெற்றுவந்தன.
அதேபோன்றதொரு பயிற்சிப்
பட்டறை நடைபெற்றுக்
கொண்டிருந்த
போதே இலங்கை அரசின்
விமானப்
படை கோரத்தாண்டவமாடி தமிழர
ை துன்பத்தில்
வாடவிட்டுள்ளது.
கடந்த 11 ஆம் திகதி முதல்
இச்செஞ்சோலை வளாகத்தில்
க.பொ.த. உயர்தர
மாணவிகளுக்கான 10 நாள்
வதிவிட
பயிற்சி நெறி நடைபெற்றுவந்
தது. இந்தப்
பயிற்சி நெறியின் 3 ஆம்
நாளின்
போதே இப்பேரனர்த்தம்
ஏற்பட்டுள்ளது. சமூக
தலைமைத்துவ திறன்கள்,
முதலுதவி, பால் சமத்துவம்
தன்னம்பிக்கையை கட்டியெழுப
்புதல், வினைத்திறனுடனான
நேர முகாமை மற்றும்
குழு வேலை போன்றவற்றில்
மாணவிகளுக்கு பயிற்சியளிப்
பதனை நோக்கமாகக்
கொண்டே இப்பயிற்சிப்
பட்டறை நடைபெற்று வந்தது.
இதன்போது கிளிநொச்சி,
முல்லைத்தீவு மாவட்டங்களைச
் சேர்ந்த 500 க.பொ.த.
உயர்தர மாணவிகள்
கலந்துகொண்டிருந்தனர்
எனத் தெரியவருகின்றது.
செய்தி கேட்டுக்கொண்டிருந்
த மாணவிகளே அதிகளவில்
கொல்லப்பட்டனர்.
"காலை 7 மணியளவில்
மாணவிகள் ஒன்றுகூடலுக்காக
தயாராகிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் பலர் தற்போதைய
யுத்த
சூழ்நிலை குறித்து அறிய
வானொலியில் செய்தியைக்
கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போதே விமானங்கள்
வட்டமிட்டு 16
குண்டுகளை அடுத்தடுத்து வீ
சின. செய்தியைக்
கேட்டுக்கொண்டிருந்தவர்கள
ே நேரடியாக
தாக்குதலுக்கு இலக்காகினர்
. இதில் அதிகளவானோர்
கொல்லப்பட்டதுடன்
பலருக்கு பின்புறத்தில்
மோசமான காயங்கள் ஏற்பட்டன.
வேறு வேலைகளிலிருந்த
மாணவிகள் அருகேயிருந்த
காட்டுப் பகுதிகளுக்குள்
ஓடிவிட்டனர்" என விடுதலைப்
புலிகளின் சமாதான செயலகம்
விடுத்திருக்கும்
இடைக்கால
அறிக்கை கூறுகின்றது.
தீயிலிருந்தும்
மின்னிலிருந்தும்
எவ்வாறு தப்புவது, அதேபோல
இரசாயன
பதார்த்தங்களிலிருந்து எவ்
வாறு பாதுகாப்பாயிருப்பது
, விமான
தாக்குதல்களிலிருந்து எவ்வ
ாறு தப்புவது, நாடகங்கள்,
இசை, நகைச்சுவை மூலமான
தனிநபர் வெளிப்பாடுகள்
போன்ற பயிற்சிகள்
ஆசிரியர்களாலும் துறைசார்
நிபுணர்களாலும்
கற்பிக்கப்பட்டதாக
அவ்அறிக்கை தெரிவிக்கின்றத
ு.
இதேவேளை, இந்தப்
பயிற்சிப்பட்டறை குறித்து
தமிழீழ கல்விக் கழக
பொறுப்பாளர் இளங்குமரன்
கூறுகையில்;
"இதுவொரு வருடாந்த
பயிற்சிப்பட்டறை.
கிளிநொச்சி கல்வி வலயத்தால
் ஏற்பாடு செய்யப்பட்ட
இப்பயிற்சி நெறிக்கு பெண்க
ள் புனர்வாழ்வு மற்றும்
அபிவிருத்தி நிலையம்
நிதியுதவியையும்
ஆதரவையும்
வழங்கியிருந்தது.
கிளிநொச்சி, முல்லைத்தீவு,
ஒட்டுசுட்டான் ஆகிய
கல்வி வலயங்களுக்குட்பட்ட
18 பாடசாலைகளைச் சேர்ந்த
உயர்தர மாணவிகளும்
வேறு கல்வி நிலையங்களைச்
சேர்ந்த
தெரிவுசெய்யப்பட்ட
பெண்களும் இப்பயிற்சியில்
பங்கெடுத்திருந்தனர்.
சிங்கள அரசு தமிழ்ச்
சமூகத்தின்
கல்வி உரிமையை மறுத்துள்ளத
ு. வரலாற்றில் சிங்கள
தீவிர வாதிகள் எப்போதும்
தாக்கியே வந்துள்ளனர்
எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாணவர்கள்
திட்டமிட்ட முறையில்
அழிக்கப்படுவது இதுதான்
முதற்தடவையல்ல. அரசின்
முப்படைகளினதும்
வெறியாட்டத்தால்
அப்பாவித் தமிழர்கள்
பட்டபாடு வார்த்தைகளால்
எழுதிவிடமுடியாது. ஏனெனில்
அந்த வலியை பதிவுசெய்யும்
ஆற்றல் இந்த
வார்த்தைகளுக்கு இல்லை.
இரு தசாப்தங்களுக்கு மேலாக
தொடரும் போரில் பேரினவாத
அரச படைகள் பாவித்த மிகப்
பயங்கரமான விமானங்கள் பல.
அவை விடுதலைப்
புலிகளை தாக்கியதை விட
பொதுமக்களையே பலிகொண்டன.
இன்று தமிழர்
தாயகத்தை விட்டு வெளியேறி
புலத்திலுள்ளவர்களானாலும்
சரி வட,
கிழக்குக்கு வெளியே இருக்க
ும் வளர்ந்தவர்களானாலும்
சரி விமானத்
தாக்குதல்களில்
அனுபவப்பட்டவர்களாக
இருப்பார்கள். அன்று ஹெலி,
சீ.பிளேன், சியாமாச்
செட்டி, அன்ரனோவ்,
சகடை (பட்டப்பெயர்),
புக்காரா என
தொடங்கி தமிழரின்
உயிர்குடித்த விமானங்கள்
தாயகத்தின் வானில்
தலைகாட்ட முடியாத
நிலையில் `மிக்' என்றும்
`கிபிர்' என்றும்
`சுப்பசொனிக்' என்றும்
அப்பாவி தமிழரின்
உயிர்குடிக்க
அனுப்பப்படுகின்றன.
இலங்கை விமானப் படைகள்
தமிழர் தாயகத்தின்
மேற்கொண்ட கண்மூடித்தனமான
தாக்குதல்கள் ஏராளம்.
இதில் பள்ளி மாணவர்கள்,
பச்சிளம்
குழந்தைகளை வகைதொகையின்றி
பலியெடுத்த வரலாறு மிகக்
கொடியது.
நாகர்கோவில் மத்திய
பாடசாலை சிறார்களின்
படுகொலை
அன்று 1995 செப்டெம்பர் 22
ஆம்
திகதி சின்னஞ்சிறுசுகளின்
கலகலப்பான பேச்சுக்களுடன்
நாகர் கோவில் மத்திய
பாடசாலை பூஞ்சோலையாக
காணப்பட்டது. பகல் 12.30
மணியளவில் மதியநேர
இடைவேளைக்கு மணியடித்த
போது பிள்ளைகள் வெளியில்
வந்து விளையாடிக்
கொண்டிருந்தனர். பகல் 12.50
மணி...
ஆக்கிரமிப்பு படைகளின்
`புக்காரா' விமானங்கள்
குண்டுகளை மாறி மாறி கண்மூ
டித்தனமாக வீசின. எதுவும்
அறியாத பிஞ்சுகள்
மரமொன்றின்
கீழே பதுங்கிக் கொண்டனர்.
இந்த
கொலை வெறிபிடித்தவர்களின்
தாக்குதல்களால் மரத்தின்
கீழே நின்ற 25 சிறார்கள்
உடல்சிதறி அநியாயமாக
கொல்லப்பட்டனர். இந்தத்
தாக்குதலின்போது 40
அப்பாவிகள் ஒட்டுமொத்தமாக
ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டன
ர். 200 பேர் வரையில்
படுகாயமடைந்தனர். இதில்
கொல்லப்பட்டவர்களில் 6
வயது குழந்தை முதல் 16
வயது சிறுவன்
வரை அடங்குகின்றனர்.
இது பாடசாலை மாணவர்கள்
படையினரால்
கூண்டோடு அழிக்கப்பட்ட
மற்றுமொரு சம்பவம். இதைவிட
மாணவர்கள், குழந்தைகள்,
பெண்கள் ,வயோதிபர்களென
எதுவித
வேறுபாடுகளுமின்றி கொல்லப்
பட்ட சம்பவங்கள் ஏராளம்.
`குமுதினி' படகில்
(நெடுந்தீவுக்கும்
குறிகட்டுவானுக்குமிடையில
் போக்குவரத்தில்
ஈடுபட்டுள்ள படகு) பயணித்த
பலரை 1984 ஆம்
ஆண்டு கடற்படை வெட்டியும்
குத்தியும் கொன்றது. இதில்
6 மாத பச்சிளம் பாலகன்
துப்பாக்கியிலுள்ள
கத்தியால் கடற்படையினரால்
குத்திக்
கொலை செய்யப்பட்டான்.
மூன்று முறை அந்த
பிஞ்சு நெஞ்சில்
குத்தி கொன்ற
கடற்படை இன்றும் தமிழர்
தாயகத்திலேயே நிலை கொண்டுள
்ளது.
இவ்வாறு இலங்கை அரசின்
முப்படைகளும்
மேற்கொள்ளும்
தாக்குதல்களால் அப்பாவித்
தமிழ் மக்கள் இழந்த
உயிர்கள், உடைமைகள்
ஏராளம். ஆனால்
தமது கண்மூடித்தனமான
தாக்குதல்களை மேற்கொண்டுவி
ட்டு அதற்குப்
பொய்யான,வொப்பான
விளக்கங்களை பேரினவாதிகள்
மாத்திரமன்றி சிங்களத்துவ
ஊடகங்களும் கூறிவருகின்றன.
இதற்கு தமிழக முதல்வர்
மு.கருணாநிதி கூறியுள்ளதை ப
திலாக முன்வைக்கலாம்.
"இனவெறி - இதயமற்றோர்
நடத்திய
முல்லைத்தீவு படுகொலைக்கு
சமாதானம் சொல்வது போன்ற
சண்டாளத்தனம்
கொடுமையானது". இலங்கையில்
நடைபெறும்
அராஜகங்களுக்கு இந்த
பழமொழியும் நன்றாக
பொருந்தும் - "பேய்
ஆட்சி செய்தால் பிணம்
தின்னும் சாத்திரங்கள்"
என்பதே அது.
Subscribe to:
Posts (Atom)










