கரும்புலிகளை நினைவுகூரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது = புலிகளின் குரல் நிறுவனம்
அன்பான தமிழீழ-தமிழக மக்களே!
எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகளாகச் செயற்பட்ட கரும்புலிகளை நினைவுகூரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அளவற்ற தியாகங்களைப் புரிந்து வளர்ந்த எமது விடுதலைப் போராட்டத்தில் தரை,கடல்,வான்,கரும்புலிகள் ஆற்றிய பங்கு அளப்பரியது.
யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான தியாகங்களையும் சாதனைகளையும் இவர்கள் படைத்தார்கள். எமது போராட்டம் தேக்கமுற்ற நேரங்களிலெல்லாம் இந்த நெருப்பு மனிதர்கள் தடைகளைத் தகர்த்து எமது போராட்டத்தை வளர்த்தார்கள்.
காற்றுப்புக முடியாத இடங்களுக்குள் கரும்புலிகள் புகுந்து ஏதிரியை அழித்தார்கள். தமது சுயத்தை அழித்து எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது உயிரையே காணிக்கையாக்கிய அந்த அற்புத மனிதர்களின் தியாகத்தை வேறு எவராலும் ஈடுகட்ட முடியாது. "எமது இனத்தின் தற்காப்புக் கவசங்களாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்" என்ற எமது தேசியத்தலைவரின் கூற்றுக்கு அமைவாக அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
எதிர்வரும் யூலை ஐந்தாம் நாள் இந்த உன்னத மனிதர்களை நினைவுகூரும் "கரும்புலிகள் நாள் 2010"
தழிழினத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் யூலை 5ம் நாள் கரும்புலிகள் நாளுக்குரிய சிறப்பு ஒலிபரப்பினை உலகம் முழுவதும் ஒலிபரப்ப திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
அன்பான தமிழ்மக்களே,
கரும்புலிகள் பற்றிய சிறப்பு ஆக்கங்கள். கவிதை, சிறுகதை, நாடகம் உட்பட வானொலியில் ஒலிபரப்ப ஏற்றவாறு எவ்வகையான கலைப்படைப்பையும் நீங்கள் எழுதி அனுப்பலாம். எதிர்வரும் யூலை மூன்றாம் நாளுக்கு முன்பாக உங்கள் ஆக்கங்கள் புலிகளின் குரல் நிறுவனத்துக்குக் கிடைக்கத்தக்க வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்
கலைப்படைப்புக்களை அனுப்ப: info@pulikalinkural.com
நன்றி.
புலிகளின் குரல் நிறுவனம்
23.06.2010
எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தடைநீக்கிகளாகச் செயற்பட்ட கரும்புலிகளை நினைவுகூரும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அளவற்ற தியாகங்களைப் புரிந்து வளர்ந்த எமது விடுதலைப் போராட்டத்தில் தரை,கடல்,வான்,கரும்புலிகள் ஆற்றிய பங்கு அளப்பரியது.
யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அற்புதமான தியாகங்களையும் சாதனைகளையும் இவர்கள் படைத்தார்கள். எமது போராட்டம் தேக்கமுற்ற நேரங்களிலெல்லாம் இந்த நெருப்பு மனிதர்கள் தடைகளைத் தகர்த்து எமது போராட்டத்தை வளர்த்தார்கள்.
காற்றுப்புக முடியாத இடங்களுக்குள் கரும்புலிகள் புகுந்து ஏதிரியை அழித்தார்கள். தமது சுயத்தை அழித்து எமது இனத்தின் விடுதலைக்காகத் தமது உயிரையே காணிக்கையாக்கிய அந்த அற்புத மனிதர்களின் தியாகத்தை வேறு எவராலும் ஈடுகட்ட முடியாது. "எமது இனத்தின் தற்காப்புக் கவசங்களாகவே நான் கரும்புலிகளை உருவாக்கினேன்" என்ற எமது தேசியத்தலைவரின் கூற்றுக்கு அமைவாக அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள்.
எதிர்வரும் யூலை ஐந்தாம் நாள் இந்த உன்னத மனிதர்களை நினைவுகூரும் "கரும்புலிகள் நாள் 2010"
தழிழினத்தின் தேசியக்குரலான புலிகளின்குரல் யூலை 5ம் நாள் கரும்புலிகள் நாளுக்குரிய சிறப்பு ஒலிபரப்பினை உலகம் முழுவதும் ஒலிபரப்ப திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கியுள்ளது.
அன்பான தமிழ்மக்களே,
கரும்புலிகள் பற்றிய சிறப்பு ஆக்கங்கள். கவிதை, சிறுகதை, நாடகம் உட்பட வானொலியில் ஒலிபரப்ப ஏற்றவாறு எவ்வகையான கலைப்படைப்பையும் நீங்கள் எழுதி அனுப்பலாம். எதிர்வரும் யூலை மூன்றாம் நாளுக்கு முன்பாக உங்கள் ஆக்கங்கள் புலிகளின் குரல் நிறுவனத்துக்குக் கிடைக்கத்தக்க வகையில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்
கலைப்படைப்புக்களை அனுப்ப: info@pulikalinkural.com
நன்றி.
புலிகளின் குரல் நிறுவனம்
23.06.2010
தமிழே நீ வாழ்க.....!!!
தமிழே நீ வாழ்க!!
அறத்துடன் மறம் கலந்து
அண்டமே திண்டாட ஆட்சி செய்த
அன்புத்தமிழே,அறத்தமிழே,என்தாயே
மறம் காத்த மண்ணிலே
திறம் காத்த உன்னோர்கள்
மதிமயங்கி எங்கேனும்
மடிந்து போனாலும்
என் கண்கள் தூங்காது
உனைப் பாடத் தயங்காது
விண்வெளியில் உன் பெயரில்
வீடமைக்க வேண்டும்-அதில்
என் தமிழை உலகமெலாம்
என்நாவால் பரப்பிடுவேன்
உன் பிள்ளை உனக்காக
பா உரைக்க வேண்டும்
கண்பார்க்கும் தூரமெல்லாம்
நீ நீயாக வேண்டும்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என
தமிழையே தாய்மொழியாக
புலத்துத் தமிழரெல்லாம்
பேச்சில் பரப்ப வேண்டும்
மறத்தமிழ் என்றுமே மறையாது
எம் வீரம் என்றுமே மண்ணிலே
அழியாது
வாழ்கதமிழ்,வளர்க தமிழ்மொழி.
வரிகள் சேர்த்தவர் - கனி
பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்
அறத்துடன் மறம் கலந்து
அண்டமே திண்டாட ஆட்சி செய்த
அன்புத்தமிழே,அறத்தமிழே,என்தாயே
மறம் காத்த மண்ணிலே
திறம் காத்த உன்னோர்கள்
மதிமயங்கி எங்கேனும்
மடிந்து போனாலும்
என் கண்கள் தூங்காது
உனைப் பாடத் தயங்காது
விண்வெளியில் உன் பெயரில்
வீடமைக்க வேண்டும்-அதில்
என் தமிழை உலகமெலாம்
என்நாவால் பரப்பிடுவேன்
உன் பிள்ளை உனக்காக
பா உரைக்க வேண்டும்
கண்பார்க்கும் தூரமெல்லாம்
நீ நீயாக வேண்டும்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என
தமிழையே தாய்மொழியாக
புலத்துத் தமிழரெல்லாம்
பேச்சில் பரப்ப வேண்டும்
மறத்தமிழ் என்றுமே மறையாது
எம் வீரம் என்றுமே மண்ணிலே
அழியாது
வாழ்கதமிழ்,வளர்க தமிழ்மொழி.
வரிகள் சேர்த்தவர் - கனி
பதிவு : கரும்புலிகள் உயிராயுதம்
முள்ளிவாய்க்காலை மறக்க வேண்டாம்-ஓவியக்கல்லூரி மாணவர் சசிக்குமார்
“முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் மறக்கக் கூடாது” என கடிதமொன்றை எழுதிவிட்டு சென்னை நுண்கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவனொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தால் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் குறித்த மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சென்னை, எழும்பூர் நுண்கலைக் கல்லூரியில் கல்வி கற்றுவந்த மதுரை, விளாங்குடியைச் சேர்ந்த மாணவராண சசிக்குமார் என்பவர், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ள சென்னை பொலிஸார், தற்கொலை செய்துகொண்ட மாணவனால் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதமொன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில், “உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும். உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக மாற்றும் மந்திரவாதிகள் தமிழர்கள்.
முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும் நாம் மறக்க கூடாது. வீடு தோறும் மரம் வளர்ப்போம். இல்லையென்றால் குடிநீர் விற்பனையாவது போல, காற்றும் வியாபாரமாகி விடும். மரம் எழுப்பும் கொள்கைக்காக என்னையே சமர்ப்பிக்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். வாழ்த்தி வழியனுப்புங்கள்.
தயவு செய்து எனது உடல் உறுப்புகளை தானம் கொடுத்துவிடுங்கள். பிறந்த பூமியில் என்னை தவழ விடுங்கள். அசையாத புகைப்படமாக இருப்பதைவிட அசைந்தாடும் மரமாக நான் எழுவேன்.
நிகழ்காலமே எதிர்காலத்திற்கு நீ நிழல் கொடு. தமிழே உனக்கு தெரியாமல் உன்னை நான் .
நேசிக்கிறேன்.” என்று அந்தக் கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.
சசிக்குமாரின் மரணம் அவரது பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் சென்னைக்கு விரைந்து வருகின்றார்கள்.சசிக்குமாரின் மரணத்தால் தமிழ்நாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தம்பி சசிகுமார்
உன் கழுத்துக்கு சுருக்கிட்டது
உன் கைகள் அல்ல .......
எம் இனத்தை கொன்றொழித்த
சிங்கள வெறியர்களின் கைகள் ...
சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்த
வல்லரசுகளின் கைகள் .....
முள்ளி வாய்கால் பேரவலத்துக்கு பின்னும்
கைகட்டி மெளனமாக நின்றவர்களின் கைகள் ....
எஞ்சி நிற்கும் போராளிகளை காட்டி கொடுக்கும்
இன துரோகிகளின் கைகள் ....
உதடுகள் மனிதநேயம் பேச உள்ளத்தால்
அது இல்லாதவர்களின் கைகள் .....
தமிழ் தமிழ் என்று பிழைப்பு நடத்தி
தமிழனுக்கு பாதகம் செய்பவர்களின் கைகள் ....
ஆண்ட பரம்பரையை அடிமைகளாக்கி
பசிக்கு ஏந்த வைத்த கைகள் ....
வீடின்றி நிலமின்றி சொந்த மண்ணில்
பராரிகளாய் நிற்க வைத்த கைகள் .....
கவலை படாமல் செல்லடா வீர வித்தே
நாளைய ஈழம் எங்கள் கைகளில் ..........
சிபிசந்தர்
திரைப்பட இயக்குனர்
News Coordinate Link : http://www.rste.org/உயிர்க்கொடை.html
மீள்பதிவு : கருவேங்கை மறவன்
தம்பி சசிகுமார்
உன் கழுத்துக்கு சுருக்கிட்டது
உன் கைகள் அல்ல .......
எம் இனத்தை கொன்றொழித்த
சிங்கள வெறியர்களின் கைகள் ...
சிங்களனுக்கு ஆயுதம் கொடுத்த
வல்லரசுகளின் கைகள் .....
முள்ளி வாய்கால் பேரவலத்துக்கு பின்னும்
கைகட்டி மெளனமாக நின்றவர்களின் கைகள் ....
எஞ்சி நிற்கும் போராளிகளை காட்டி கொடுக்கும்
இன துரோகிகளின் கைகள் ....
உதடுகள் மனிதநேயம் பேச உள்ளத்தால்
அது இல்லாதவர்களின் கைகள் .....
தமிழ் தமிழ் என்று பிழைப்பு நடத்தி
தமிழனுக்கு பாதகம் செய்பவர்களின் கைகள் ....
ஆண்ட பரம்பரையை அடிமைகளாக்கி
பசிக்கு ஏந்த வைத்த கைகள் ....
வீடின்றி நிலமின்றி சொந்த மண்ணில்
பராரிகளாய் நிற்க வைத்த கைகள் .....
கவலை படாமல் செல்லடா வீர வித்தே
நாளைய ஈழம் எங்கள் கைகளில் ..........
சிபிசந்தர்
திரைப்பட இயக்குனர்
News Coordinate Link : http://www.rste.org/உயிர்க்கொடை.html
மீள்பதிவு : கருவேங்கை மறவன்
கே.பி அவர்களுக்கு ஓர் திறந்தமடல் - சேரமான்
அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ...
தெரியவில்லை.
மாண்புமிக்கவரோ அல்லது மேன்மைதங்கியவரோ...
அறியவில்லை.
கே.பியோ, குமரன் பத்மநாதனோ அல்லது செல்வராசா பத்மநாதனோ...
புரியவில்லை.
எவராயிருப்பினும் தவறாக விளித்திருப்பின் மன்னித்தருள்க!
ஐயா!
விடுதலைப் போராட்டத்தின் முன்னோடிகளோடு வாழ்ந்தவர் நீங்கள்.
விடுதலைக்காகவே புலம்பெயர்ந்தவர் நீங்கள். தேசங்கள் பல அலைந்து நிதியும், ஆயுதமும் திரட்டியோரின் வலியை நன்கு அறிந்தவரும் நீங்கள்.
இலங்கை உங்களைத் தேடியது.
இந்தியா உங்களைத் தேடியது.
இன்ரர்போலும் உங்களைத் தேடியலைந்தது.
இருந்தாலும் எல்லோர் கண்ணில் மண்ணைத் தூவி...
எல்லோர் காதிலும் பூவைச் சுற்றி...
எல்லோர் வாயிலும் துணியை அடைத்து...
முழு உலகையும் குழப்பியடித்த சாகசக்காரன் அல்லவா நீங்கள்?
இறுதிவரை உங்களை எங்களில் ஒருவராக அல்லவா நினைத்திருந்தோம்?
ஆனால் எங்களையே முட்டாளாக்கி எங்களையே அழித்துவிட்டீர்களே!
எல்லோர் கண்ணிலும் நீங்கள் மண்தூவிய பொழுது, அது எங்கள் கண்ணையும் மூடிவிடும் என்பதை நாங்கள் அறியவில்லைதான்.
எல்லோர் காதிலும் நீங்கள் பூச்சுற்றிய பொழுது, எங்கள் காதிலும் நீங்கள் பூச்சுற்றுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லைதான்.
எல்லோர் வாயிலும் நீங்கள் துணியை அடைத்த பொழுது, எங்கள் வாயும் அடைக்கப்படும் என்று நாங்கள் எண்ணவில்லைதான்.
முழு உலகையும் நீங்கள் குழப்பிய பொழுது, எங்களையும் குழப்புவீர்கள் என்று நாங்கள் நினைக்கவேயில்லைதான்.
ஐயனே!
2003வரை நீங்கள் ஆற்றிய பணிகளை ஒருபுறம் தள்ளிவைப்போம். அதன் பின்னர் ஓய்வூதியம்பெற்று நீங்கள் ஒதுங்கியிருந்ததாகக் கூறப்படும் ஐந்தாண்டுகளையும் ஒதுக்கிவைப்போம்.
ஆனால் அதன் பின்னர் நீங்கள் செய்தது எல்லாம் படுபாதகத்தனம். அண்ணன் வைகோவின் வார்த்தைகளில் கூறுவதானால் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
2009இல் உங்களை ரொபேர்ட் ஓ பிளேக் சந்தித்து ஆயுதக் களைவுபற்றிப் பேசியதும்...
ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு அரசியல் போராட்டத்தில் புலிகள் ஈடுபட வேண்டும் என்று தொலைபேசியில் எரிக் சுல்கைம் கூறியதும்...
ஆயுதங்களைக் கொள்கலன்களில் பூட்டி ஐ.நாவிடம் புலிகள் ஒப்படைக்க வேண்டும் என்று உங்களிடம் பா.சிதம்பரம் சூசகமாக அறிவுறுத்தியதும்...
அதை அப்படியே தேசியத் தலைவரிடம் ஒப்புவித்தவர் அல்லவா நீங்கள்? அதற்காகவே வாங்கிக்கட்டிக் கொண்டவர் அல்லவா நீங்கள்!
‘புலிகளின் ஆயுதங்கள் மக்களின் ஆயுதங்கள், இந்த ஆயுதங்களே மக்களின் பாதுகாப்புக் கவசங்கள்' என்று எங்கள் மறைந்த தேசத்தின் குரல் கூறிய வார்த்தைகளை நினைவூட்டித்தானே உங்கள் ஆயுதக் களைவு ஆசையை நாங்கள் மறக்க வைத்தோம்.
ஞாபகம் வருகின்றதா? நினைவில் இருக்கின்றதா? சரி. அதுதான் போகட்டும்.
இறுதிக்கணங்களில் மக்களைக் காப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உங்களிடம் நடேசன் அண்ணா கேட்ட பொழுது...
களநிலவரங்களை தளபதி சூசை எடுத்து விளக்கிய பொழுது...
நீங்கள் பேசிய பசப்பு வார்த்தைகள் என்ன கொஞ்ச நெஞ்சமா?
ஐ.நா செக்கியூரிட்டிக் கவுன்சிலில் பேசுவதாகக் கூறினீர்கள்.
நியூயோர்க்கில் இராசதந்திரம் செய்வதாகக் கூறினீர்கள்.
ஜெனீவாவில் ஐ.சி.ஆர்.சியுடன் கதைத்துக் கொண்டிருப்பதாகக் கூறினீர்கள்.
கூறிக்கொண்டேயிருந்தீர்கள். நீங்கள் மட்டுமா கூறிக்கொண்டிருந்தீர்கள், உங்கள் வழித்தடம் பின்பற்றுவோரும் அல்லவா கூறிக்கொண்டிருந்தார்கள்!
புலிகளுக்குப் பின்னரான காலம்பற்றி கிலாரி கிளின்ரன் பேசிய பொழுது அதனை வரவேற்று அறிக்கை விட்டீர்கள்.
புலிகள் ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று பராக் ஒபாமா பேசிய பொழுது அதை நல்லெண்ண சமிக்ஞை என்று கதையளந்தீர்கள்.
எங்களுக்கு அப்பொழுது எதுவும் புரியவில்லைதான். எல்லாம் இராசதந்திரம் என்று நினைத்திருந்தோம்.
உங்கள் இராசதந்திரிகளையும் நம்பியிருந்தோம். எல்லாம் நடந்து முடிந்த பின்னரும் அது உங்களின் கைங்கரியம் என்று எங்களுக்குப் புரியவில்லை. கருணாவைத் திட்டினோம். கருணாநிதியை சபித்தோம். அந்த நேரத்தில் உங்களை மட்டும் நாங்கள் மறந்தேவிட்டோம்.
எங்கள் தேசியத் தலைவன் வீரமரணம் எய்திவிட்டதாக நீங்கள் அறிவித்த பொழுது...
அடுத்த தலைவன் நீங்களே என்று உங்களுக்கே நீங்கள் சுயமகுடம் சூடிக்கொண்ட பொழுது...
எல்லாம் முடிந்துவிட்டது இனிப் புதிய வழியில் சிந்திப்போம் என்று நீங்கள் அறிவித்த பொழுது...
மட்டக்களப்பில் நின்ற எங்கள் சார்ள்ஸ் அன்ரனிப் படையணி வீரர்களையும், ஜெயந்தன் படையணி மறவர்களையும் சிங்களப் படைகளிடம் நயவஞ்சகமாக நீங்கள் சிறைப்பிடித்துக் கொடுத்த பொழுது...
யாழ்ப்பாணத்தில் எஞ்சியிருந்த எங்களை போராளிகளை சிங்களப் படைகளிடம் நீங்கள் காட்டிக் கொடுத்த பொழுது...
உங்கள் கயமைத்தனம் எங்களுக்குப் புரியவில்லை. தேர்தல், சனநாயகம், பன்மைத்துவம் என்றெல்லாம் நீங்களும் உங்களின் அடியாட்களும் புலம்பெயர்தேசங்களில் கருத்துரைத்த பொழுது, உங்களின் நரித்தனம் எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் சூரியத்தேவனுக்காக கலங்கியழுவது போல் தொலைக்காட்சியில் நீங்கள் விம்மிய பொழுது, நீங்கள் நடித்தது எங்களுக்கு புரியவில்லை.
சிங்கள அரசின் உளவாளி என்று உங்களை சிலர் விளித்த பொழுது, ‘எனக்கென்ன இலங்கை அரசு அமைச்சர் பட்டமாக தரப்போகின்றது?' என்று நீங்கள் கேட்டபொழுது, உங்கள் ஆசையை நாங்கள் புரிந்துகொள்ளவில்லைதான்.
இறுதியாக மலேசியாவில் நீங்கள் சிறைப்பட்டதாக அறிந்த பொழுது, சிங்களத்தின் அரூபகரங்கள் எல்லைதாண்டிய பயங்கரவாதமாக விசுவரூபமெடுப்பதாக அல்லவா நாங்கள் நினைத்திருந்தோம்?
எல்லாம் நாடகம் என்று இப்பொழுது அல்லவா புரிகின்றது! சூரியத்தேவனுக்கு முராரி ராகம் எழுதுமாறு உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தனிடம் நீங்கள் கண்ணீர்விட்டு நாடகமாடிய பொழுது அதன் அர்த்தம் எங்களுக்குப் புரியவில்லை.
சூரியத்தேவனுக்கு முடிவுரை எழுதுமாறு பழ.நெடுமாறன் ஐயாவிடமும், வைகோ அண்ணனிடம் நீங்கள் மன்றாடிய பொழுது அதன் அர்த்தம் எங்களுக்குத் தெரியவில்லைதான். டக்ளஸ் தேவானந்தாவுடன் தொலைபேசியில் நீங்கள் கதைத்த கதையும் அப்பொழுது எங்களுக்குத் தெரியாததுதான்.
சிங்கப்பூரில் பிள்ளையானுக்கு நீங்கள் விருந்தோம்பல் அளித்த விடயமும் அப்பொழுது நாங்கள் அறியாததுதான்.
இருந்தாலும் என்ன? இப்பொழுதுதான் எல்லாம் பட்டவர்த்தனமாகிவிட்டதே!
இறுதிப் போர் நிகழ்ந்தேறிய வேளையில் எங்கள் தேசியத் தலைவனை வன்னியை விட்டு வெளியேறி உங்கள் இடத்திற்கு வருமாறு அழைத்தீர்கள்.
நல்லவேளை, உங்கள் அழைப்பிற்கு சூரியத்தேவன் செவிசாய்க்கவில்லை. செவிசாய்த்திருந்தால்?...
நினைக்கவே குலைநடுங்குகின்றது. நெஞ்சம் நடுக்குறுகின்றது.
நயவஞ்சகமாக நடேசன் அண்ணாவையும், எங்கள் தளபதிகளையும் சிங்களம் கொல்வதற்கு துணைநின்றவர் அல்லவா நீங்கள்!
எங்கள் போராளிகளும், மக்களும் சிங்களப் படைகளிடம் சிறைப்பட்டதற்கு காரணமாக அமைந்தவர் அல்லவா நீங்கள்!
இறுதியாக உங்களிடம் ஒரு கேள்வி: கட்டப்பொம்மனின் பாஞ்சாலங்குறிச்சியை வீழ்த்துவதற்கு ஓர் எட்டப்பனும், பண்டாரவன்னியனின் வன்னிமையை வீழ்த்துவதற்கு வெள்ளையர்களுக்கு ஓர் காக்கைவன்னியனும் தேவைப்பட்டது.
ஆனால் எங்கள் தமிழீழத்தை சிங்களம் வீழ்த்துவதற்கு உதவியது யார்?
அத்தியடிக்குத்தியன் டக்ளஸ் தேவானந்தாவா?
காகிதப்புலி கருணாவா?
அல்லது எங்கள் காதில் பூச்சுற்றிய நீங்களா?
டக்ளசும், கருணாவும் ராஜபக்ச சகோதரர்களின் இரண்டு கண்கள் என்றால், நீங்கள் என்ன ராஜபக்ச சகோதரர்களின் நெற்றிக் கண்ணா?
சரி. நீங்கள் விட்டுச்சென்ற பாதையில் பயணிக்கப் போவதாக புலம்பெயர் தேசத்தில் வீரசபதம் எடுத்தவர்கள் இனி என்ன செய்யப் போகின்றார்கள்?
உங்கள் வழியில் கொழும்பு வரப் போகின்றார்களா?
தயைகூர்ந்து விளக்குக. தயக்கம் இருந்தால் புலம்பெயர் தேசத்தில் உங்களுக்கு ஆலவட்டம் பிடிக்கும் உங்கள் ஆலோசகர்களைக் கொண்டாவது விளக்குக!
மீள்பதிவு : கருவேங்கை மறவன்
நாம் அணிவகுத்துள்ளோம்......!!!
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்...
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.
ஆக்கியவர் :திரு. வே.பிரபாகரன்
பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்
(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை)
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி நமது நாட்டை
வஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறி
இழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்
ஆனால்...
அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்
கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமது
ஆத்ம பலமோ அதைவிட
வலிமை வாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்
எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்...
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்பு
எமது தமிழ்ஈழ மக்களிடையே
அணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடத்தில் உள்ள
பிரதேசம் சாதி
மதமென்னும் பேய்களும்
அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்
மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்
உவகை தெரிகிறது
ஏழைகள் முகங்களில்
புன்னகை உதயமாகிறது.
ஆக்கியவர் :திரு. வே.பிரபாகரன்
பதிவு :கரும்புலிகள் உயிராயுதம்
(1981-ஆம் ஆண்டில் தமிழீழ தேசியத் தலைவர் திரு.வே.பிரபாகரன் அவர்கள் எழுதிய கவிதை)
MIA: I speak for my people.....!!!
http://www.lankasrinews.net/view.php?2bIAQUe0dRlmA0ecBBYA4a4p54Scd3cYB3dc2Amd2a434OX2e230Mm30
Coordinate By : Akkini Puththiran
பழந்தமிழ்ப் பெருமை பேசி இன்றைய தமிழரின் அவலம் மறைக்கவே செம்(மறி)மொழி மாநாடு....!!!
நடைபெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்(மறி)மொழி மாநாடு இதுவரை நடத்தப்பெற்று வந்த எட்டு உலகத் தமிழ் மாநாடுகளிலிருந்து வேறுபட்டது. உலகத் தமிழ்பேசும் மக்கள் தற்போது எதிர்கொண்டிருக்கும் அரசியல் பிரச்சினைக்குள் இறங்காமல் தப்பிக்கும் பொருட்டு கொலைஞர் தமிழின துரோகி கள்ளன் கருணாநிதி இம்மாநாட்டை உலகச் செம்மொழி மாநாடாக நடத்த விருபுகிறான்.
பரிதிமாற்கலைஞர் தொடங்கிவைத்து, தமிழர் அனைவரும் நூற்றாண்டுக்குமேல் நடத்தி வந்த போராட்டத்தின் விளைவாக 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் மத்திய அரசு தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்தது. கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கொண்ட உலகச் செம்மொழிப் பட்டியலில் தமிழும் சேர்க்கப்பட்டுவிட்டது.
செம்மொழி என்றாலே அது வாழும் மொழி, வளரும் மொழி, அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்ற ஆட்சி மொழி என்று பொருள் அல்ல. தமிழ் மொழியைப் போன்று அடிமைப்பட்டிருக்கும் ஒரு மொழியை செம்மொழி என்று அறிவிப்பதால் அது விடுதலை பெற்றமொழி ஆகிவிடாது.
இச்செம்மொழிகளுள் இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகிய மூன்றும் ‘இறந்தமொழி’ என்பதற்கு எடுத்துக்காட்டு. கிரேக்கம், இலத்தீன் ஆகிய இருமொழிகளுமே வழக்கிறந்ததற்கு அரசியல் முக்கிய காரணம்.
கிரேக்க நாடு அடிமைப்பட்டிருந்ததால் கிரேக்க மொழியும் அழியும் நிலைக்குச் சென்றது. ரோமப்பேரரசின் அழிவுக்குப்பின் பலதேசங்கள் விடுதலைபெற்றதால், இலத்தீன் செம்மொழியாக இருந்தாலும் தேசம் இல்லாததால் இலத்தீன் மொழி அழிந்தது.
ஒரு மொழி வழக்கிறந்து போவதற்கு பல காரணங்கள் உண்டு. அரசியல் காரணமாக, பிற இனத்தவர் படையெடுப்பால் தாக்கப்பட்டு, நாடிழந்து அடிமைகளாய் வாழும் காலத்தில் வேறு வழியின்றி அந்நிய மொழித் திணிப்பினை ஏற்று மக்கள் தங்கள் மொழியினை காலப்போக்கில் கைவிட்டு புதிய மொழிகளை ஏற்க நேர்கிறது.
தொன்மையான மொழிகள் என்பவை சொல்திறனும் வளமும் சமுதாய வாழ்க்கை முறையில் செயலற்று நிற்பதாலேயே அவை வழக்கிறந்து நிற்கின்றன. தமிழில் இறந்த மொழி எனக் கூறுதல் மரபு அன்று. ஆகையால் ‘வழக்கு அழிந்த மொழி’ என்று குறிப்பிடுவர்.
“தமிழின் வாழும் தன்மையை,
ஆரியம் போல் உலக வழக்கு
அழிந்தொழிந்து சிதையா நின்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே” எனத் தமிழை வாழ்த்தினார், சுந்திரம்பிள்ளை அவர்கள்.
மொழி என்பது மக்கள் தொடர்புக்காக ஏற்பட்டது. சமுதாயக் கூட்டு வாழ்க்கையில் பயன்படுத்தப்படாத போது அது இறந்ததாகக் கருதப்படுகிறது.
சமூக உற்பத்தி, வாணிபம், விஞ்ஞானம், கல்வி, கலை, வரலாறு, சமயம் ஆகிய எல்லாத் துறைகளிலும் மொழி பின்னிப்பிணைந்திருக்கிறது. எனவே மொழியின் வளர்ச்சி இலக்கியத்துறையை மட்டும் சார்ந்ததாகாது. மொழி ஆக்கம் தரவேண்டுமானால், சில காலம் தேங்கிய இடைவெளிக்குப் பிறகு அதனை முன்னேறச் செய்யவேண்டுமானால், எல்லாத் துறைகளிலும் அதனை வளம்பெறச் செய்தல் வேண்டும்.
தமிழ் செம்மொழி என அறிவித்திருந்தாலும், இந்தியாவின் தரகுப் பெருமுதலாளித்துவ பெருநிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார அரசு ஆங்கிலத்தையும் இந்தியையும் திணித்து எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும், மொழியையும் அடக்குகிறது.
இத்தகைய சூழ்நிலையில் செம்மொழி மாநாடு பற்றி தமிழாய்வாளரான மா.இலா.தங்கப்பா பின்வருமாறு கூறுவது மனங்கொள்ளத்தக்கது:
“தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும், ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக்காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டலுக்கு உட்பட்டு உழலுகின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரை பல்லாண்டு காலமாய்ப் பிணித்துள்ள ஒரு நோய் எனலாம். இப்பெருநோயின் மற்றோர் அறிகுறிதான் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை.“
அந்நிய ஆதிக்கமும் ஆட்சிமொழியும்:
தமிழ் மொழியானது, கிரேக்கம், சீனம் போன்ற செவ்வியல் மொழிகளுக்கு நிகரான இலக்கிய வளமுடையது. நம் தமிழகப் பகுதியைப் பொறுத்து நீண்ட காலமாகவே அந்நிய மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்து வந்துள்ளன. சோழர் காலத்திலும் ஆட்சிமொழியில் வடமொழிக்கு இருந்த செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்குப் பின்னர் ஆண்ட தெலுங்கர், மராத்தியர், இசுலாமியர் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் மைய நிர்வாக மொழிகளில் தெலுங்கு, மராத்தி, உருது, பாரசீகம் ஆகியன செல்வாக்கு செலுத்தின. தமிழ் தனித்த அடையாளத்துடன் விளங்கிடப் பெரும்பாடுபட்டது. தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் மிக்கது என்று காலந்தோறும் நிரூபிக்க வேண்டிய அவலத்திற்குள்ளாகியுள்ளது.
1857க்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியப் பகுதிகளை நேரடியாகத் தன் ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்த பின்னரே, இந்தியா என்ற ஒரு காலனி நாடு உருவானது. அதற்கு முன்னர் இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை இந்தியாவில் ஆங்கிலமே ஆதிக்கத்தில் உள்ளது.
தமிழன் இன்று தமிழகத்தில் மட்டுமில்லை, மொரீஷியஸ், பிஜித்தீவு, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகெங்கும் தமிழர்கள் பரவியுள்ளனர். இலங்கையில் தமிழீழம் உள்ளது, மற்றும் மலையக மக்கள் வாழ்கின்றனர். 18ஆம் நூற்றாண்டு தொடங்கி உலகமெங்கும் பிழைப்பதற்காகப் போன தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கை துயரமானது. இன்று இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, மொழிச் சிறுபான்மையினராகவோ வாழ்கின்றனர். இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழைப் பேச அறியாது உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் தமிழ்ப் பண்பாடு இன்னும் எந்த அளவில் இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது.
இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னர் இந்தியா போன்ற ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன்அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கம் புதிய காலனிய ஆதிக்கம் என்ற வடிவில் மறைமுகமாகத் தொடர்ந்து இருக்கிறது.
இத்தகைய புதிய காலனிய ஆதிக்கம், மொழியிலும் காணப்படுகிறது. இந்தநாடுகள் மூலதனத்துக்கும் தொழில் நுட்பத்துக்கும் ஏகாதிபத்தியவாதிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளன. ஏகாதிபத்திய நாடுகள் கனிவளங்களையும் மனித உழைப்பையும் இந்தச் சார்பு நாடுகளிலிருந்து அபகரிப்பதை இன்றளவும் காண்கிறோம். இத்தகைய பின்புலத்தில் இந்த நாடுகளின் அதிகாரபூர்வ ஆட்சி மொழியாகவோ, அதிகாரபூர்வமற்ற ஆட்சிமொழியாகவோ, முதன்மொழியாகவோ, சமூகக் கௌரவமிக்க மொழியாகவோ ஏகாதிபத்திய நாடுகளின் மொழிகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. இது மொழி வழியிலான ஏகாதிபத்திய ஆதிக்கம். இந்தியாவில் இது ஆங்கில மொழியின் ஊடாகப் பயணம் செய்கிறது.
1802 முதல் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ற விதத்தில் இந்தியப் பகுதிகள் அனைத்தும் நிர்வாக, அரசியல், இராணுவ, பொருளாதார நிலைகளில் வலுக்கட்டாயமாகவும் வன்முறையாகவும் ஒருங்கிணைக்கப்பட்டன. இது ஏகாதிபத்திய நலன்களுக்கான அனைத்திந்திய உருவாக்கமாகும். இதற்கு ஒற்றை அரசாங்க வடிவமும் (Unitary state) மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் தேவைப்பட்டன. அனைத்து தேசிய இனங்களும் சம உரிமையைப் பெறாத அனைத்திந்தியப் போக்கு, தேசிய இனங்களின் மொழிகள் ஆட்சி மொழியாவதற்கும் பயிற்று மொழியாவதற்கும் பெரும் தடையாக உள்ளது.
இந்த அனைத்திந்தியப் போக்கு என்பது உள்நாட்டில் இந்தி மொழிக்கான மேலாதிக்கத்துடன் வெளிப்படுகிறது. அரசியல் சட்டத்தில் இந்தி மொழிக்கும் சிறப்புத் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. பலவழிகளில் தேசிய இன மொழிகளுக்குரிய சமத் தகுதி அரசியல் சட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளது. இது தேசிய இனங்களுக்கு இடையிலான சமத்துவமற்ற நிலையை அடிப்படையாகக் கொண்ட அனைத்திந்தியப் போக்கின் வெளிப்பாடு.
நமக்குத் தேவை தேசிய இனங்களின் சமத் தகுதியும், சம உரிமையும், சுயநிர்ணய உரிமையும் கொண்ட அனைத்திந்தியத் தன்மையாகும். இத்தகைய அமைப்பில் அந்நிய மொழியின் மேலாதிக்கம் ஒரு தேசிய இனத்தின் மீது இராது.
தாய்மொழிதான் என்றும் நம் ஆட்சி மொழி.
நம் தாய்மொழியாம் தமிழ்மொழி, இங்கு ஆட்சி மொழியாக, கல்விமொழியாக, தொடர்பு மொழியாக இல்லை. நமக்கான ஆட்சி, நமக்கான கல்வி நம் தாய் மொழியில்தான் இருக்கவேண்டும். மாறாக ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கின்றன.
இன்று அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. மக்கள் தம் கருத்துக்களை வெளியிடவும் நிலைநாட்டவும், அரசின் போக்கை புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும், அரசியல் அதிகாரத்தில் பங்குகொள்ளவும் ஆட்சிமொழி அம்மக்களின் தாய்மொழியாக இருக்கவேண்டும் என்பது உயிராதாரமான கோரிக்கையாகும். இக்கோரிக்கை இங்கு நிறைவேற்றப்படவில்லை. அரசுத் துறையின் கீழ்நிலைப் பணியாளர்களை வேலைவாங்குவதற்காக மட்டும்தான் தமிழ் ஓரளவு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலை சரிதானா?
இங்கு ஆரம்பக் கல்வியும் ஆங்கிலத்தில், உயர் கல்வியும் ஆங்கிலத்தில், ஆங்கில வழியில் கற்றவர்களே மூளை உழைப்பாளர்களாக நியமிக்கப்படுவது என்கிற இந்தச் சூழலை மாற்றாமல் – ஆங்கிலத்தை அகற்றாமல் – தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக்க முடியாது. தமிழை முழுமையான அளவில் ஆட்சி மொழியாக பயிற்று மொழியாக மாற்றாமல் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது.
புதிய காலனியும் பயிற்று மொழியும்:
தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில வழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி கல்லூரி வரை எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்.
19.07.1854ல் இந்தியாவில் நவீன கல்வியை அறிமுகப்படுத்திய சார்லசு உட் குழுவின் நவீனக் கல்வியின் நோக்கங்களாகவும், பயிற்று மொழி முறைகளாகவும் எழுதிய பரிந்துரைகளில் ஏகாதிபத்திய நலனும் ஆங்கில மேலாதிக்கமும் அடிப்படையாக உள்ளன. இன்றைய கல்வியிலும் இவை தொடர்கின்றன.
பயிற்று மொழி என்பது கல்வியைக் கற்றுத்தரும் ஊடகம். கல்வியை உற்பத்தி முறையின் தேவையோடு தொடர்புபடுத்திக் காண வேண்டும். இன்றைய ஏகாதிபத்தியச் சார்பான உற்பத்தி முறைக்கு ஏற்பவே நம் கல்வியின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. அந்நிய ஏகாதிபத்திய நாடுகளுடனான கூட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியே இன்றைக்கு இந்திய முதலாளிய உற்பத்தியையும் நிலப்பிரபுத்துவ உற்பத்தியையும் மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவின் உற்பத்தியில் அந்நிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவரும் உற்பத்தி இன்று அதிகமாக பெருகியுள்ளது. ஏகாதிபத்திய உலகமயக் கொள்கையும் இப்பொழுது அறிவிக்கப்பட்ட புதிய தொழில்க் கொள்கையும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்ததாக உள்ளன. இது புதிய காலனிய முறை தொடர்வதையே நமக்குக் காட்டுகிறது. இத்தகைய உற்பத்திமுறைக்கேற்ற கல்வியே கீழிருந்து மேல்நிலை வரை அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உற்பத்தி முறைக்குச் சார்பான கல்வியின் சாராம்சம்:
கொடுக்கப்படும் கல்வி ஏகாதிபத்தியச் சார்பானது, பரந்து பட்ட இந்திய மக்களுக்கானதாக இல்லை. இத்தகைய கல்வியின் பயிற்றுமொழி அந்நிய மொழியின் ஆதிக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிற்று மொழியின் ஆணிவேர் ஏகாதிபத்தியச் சார்புத் தன்மையில் அடங்கியுள்ளது. இந்தக் கல்வியின் பயிற்றுமொழி இந்திய மக்கள்விரோத உள்ளடக்கத்தின் வெளிப்பாடு.
கல்வியின் ஏகாதிபத்தியச் சார்பு உள்ளடக்கத்தை, தாய்மொழியை பயிற்றுமொழியாக ஆக்குவதற்குத் தடையாகக் கருதாமல்; பயிற்றுமொழி என்ற வடிவத்தை மட்டுமே மாற்றக் கோருதல், உள்ளடக்கத்தைப் புறக்கணித்துவிட்டு வடிவத்தை மட்டுமே கருத்தில் கொள்வதாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் நோக்கமற்ற விதத்தில், ஒரு தேசிய மொழியைப் பயிற்று மொழியாக்கிவிட இயலும் என்ற தவறான அரசியல் நம்பிக்கையை ஊட்டுவதற்கு துணைபோவதாகும்.
தாய்மொழிக் கல்விக்கு ஈடு இணை ஏதுமில்லை
நமக்கென்று ஒரு தாய்மொழி இருக்கும்போது அந்நிய மொழியில் கல்வி கற்பது தேவையே இல்லாத ஒன்று. தாய் மொழிதான் சிந்தனையின் மொழி. அதனால் தாய்மொழிக் கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை வளரும். ஆக்கபூர்வமான அறிவு கிட்டும். அந்நிய மொழிக் கல்வி சுமைமிக்கது. மேலும் மக்கள் மயமாவது இல்லை. எல்லோருக்கும் கல்வி கிடைப்பதற்கு ஒரே வழி தாய்மொழிக் கல்விதான்.
முன்பு வேதங்களை பார்ப்பனர்களின் ஏகபோகமாக வைப்பதற்காக, பிறர் வேதம் படிக்கத் தடை இருந்தது. பார்ப்பன-சத்திரியன் அரசியல் அதிகாரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காகச் சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தைச் சொல்லி வைக்கலாகாது என இருந்தது போல, இப்போது உழைக்கும் வர்க்கத்திடமிருந்து கல்வியைப் பறித்து, மேல்தட்டுப் பிரிவினரின் ஏகபோகமாக்கிட அந்நிய மொழிக் கல்வி உதவுகிறது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்கவேண்டும் எனக் கோருவது நமது அடிப்படை உரிமையாகும். இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக ஆரம்பக்கல்வி முதலே ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்வழிப் பள்ளிகள் ஏதோ பெயருக்கு இருக்கின்றன.
தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ்மொழி ஆட்சி மொழியாவதற்கும், பயிற்றுமொழியாவதற்கும், அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய அரசு தடையாக இருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்யும் இந்திய அரசு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பாசிச முறையில் ஒடுக்குகிறது.
கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிக்கிறது. மாநில ஆட்சிகளும் மாநில அளவிலான தரகுமுதலாளியக் கட்சிகளும் கட்டாய ஆட்சி மொழியாக ஆங்கிலமே இருக்கவேண்டும் என வலியுறுத்தின. இனச் சமத்துவத்தையும், மொழிச் சமத்துவத்தையும் மறுத்து, மைய அரசு செயல்படுத்திவரும் தேசிய இன ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொண்டே மாநில ஆட்சிக்கு அதிக அதிகாரம் கோருவதோடு தம்மைக் குறுக்கிக் கொண்டன. தமிழகத்திலும் இதுதான் நடந்தது.
தமிழை முழுமையாக ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சிசெய்யப்படவில்லை. மாறாக, ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகத்தான் இங்குள்ள திராவிடக் கட்சிகள் அரும்பாடுபட்டன.
செம்மொழி மாநாடு
">அண்டை வீட்டில் இழவு விழுந்தால் ஏதோ எம் வீட்டில் நடக்ககூடாது நடந்துவிட்டது போல ஒரு தவிப்புடன் இருப்போம். சில காலத்திற்கு எம் வீட்டின் நல்ல காரியங்களைக் கூட தள்ளி வைப்போம். ஆனால் இந்த பாதகன் அண்டை நாட்டில் சொந்த மக்கள் கொத்துக் கொத்தாக பொசுக்கப்பட அந்த நேரத்தில் வாரிசு அரசியலுக்காக அங்கும் இங்குமாக தள்ளாத வயதிலும் நாயோட்டம் ஓடிவிட்டு இப்ப தன் புகழ் பாட ஒரு விழா எடுக்கிறான்....தன் சொந்தங்களின் இரத்தம் காய்வதற்குள் .....!!! தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும், தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்கவும் பயிற்றுமொழியாக்கவும் போராடக் கிளந்தெழும் மக்களைத் திசை திருப்புவது இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதற்கான நோக்கங்களில் ஒன்று.
தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்தச் சொல்லி தங்கள் கோரிக்கையை இந்தியாவுக்கு எடுத்துரைத்துப் போராடினார்கள் தமிழ் மக்கள். ஆயினும் சிங்களப் பேரினவாத பவுத்த மதவாத இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்வதற்கு மாறாக, ஆயுதம் கொடுத்தும், பண உதவி செய்தும், போரில் மறைமுகமாகப் பங்குகொண்டு தமிழீழ மக்களின் விடுதலைப் போரை முறியடிப்பதிலும் மக்களைக் கொன்று குவிப்பதிலும் பெரும் பங்காற்றியது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரட்டைவேடம் பூண்டு இந்தப் போரில் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவுகொடுத்து தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்தார். இந்தத் துரோகத்தை மறைத்தல் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதற்கு மற்றொரு நோக்கமாகும்.
பழந்தமிழ்ப் பெருமை பேசல் இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே!
வேறுவிதமாகச் சொன்னால், பழந்தமிழ்ப் பெருமைபேசி இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு. இதுதான் கலைஞர் கருணாநிதியின் தந்திரம். சுந்திரம்பிள்ளை, பரிதாமாற்கலைஞர் ஆகியோர் இவருக்கு வழிகாட்டிகள்.
ஆரியம் வழக்கொழிந்து போகத் தமிழ் இளமை மாறாதிருப்பதகாக் கூறிச் செல்கிறார் சுந்தரம்பிள்ளை அவர்கள். இது பின்னோக்கிப் பார்த்து பழமை பேசும் செயலாகும். சென்ற காலத்தின் சிறப்புப் பற்றிய குரல் இது. அதே தமிழ் மொழி தனது காலத்தில் அறிவியல் துறையில் பின்தங்கி இருப்பதைக் காணவில்லை.பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தமிழ்மொழி அனைத்துத் துறைகளிலும் ஆங்கில மொழி ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதைப் பற்றியும் கவலையில்லை. தமது காலத்து விவகாரங்களில் வெள்ளைக்கார ஆட்சியையும் சமஸ்தான மன்னராட்சியையும் சுந்தரம்பிள்ளை ஏற்றுக்கொண்டார். நிலவிய அரசியல் வரம்பிற்குள் மொழி, இலக்கியம் முதலியவற்றை பேணுவதே இலட்சியமாகக் கொண்டார்.
கலைஞர் கருணாநிதி அவர்களும் பழந்தமிழ்ப் பெருமை பேசுகிறார். ஆனால் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அரசினால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, குறிப்பாகத் தமிழ்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்குவது, பயிற்றுமொழியாக்குவது ஆகியவற்றிற்கான போராட்டத்தைக் கைவிட்டு எங்கும் எதிலும் ஆங்கிலமயப்படுத்துகிறார்.
சுந்தரம்பிள்ளை போன்றோர் மீது பாரதி வைத்த விமர்சனம் கலைஞருக்கும் பொருந்தும்.
“மறைவாகத் தமக்குள் பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை”அதுமட்டுமல்ல.முக்காலத்தை யும் இணைத்துப்பார்க்க வேண்டு மென்றும் கூறுகிறார்.
“முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்திலார்
பேடிக்கல்வி பயின்றுழப் பித்தர்கள்”
கலைஞர் கருணாநிதி, மூண்டிருக்கும் இந்நாளின் நிகழ்ச்சியை நன்கறிந்தவர்தான். ஆனால் கண்முன் கண்ட நிகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் விமோசனம் தேடுவதற்குப் பதிலாக அகில இந்திய தரகுமுதலாளித்துவத்துடன் சமரசப் பாதையைப் பின்பற்றுகிறார். எனவே பழந்தமிழ்ப் பெருமைபேசி இன்றைய தமிழரின் அவலத்தை மறைக்க செம்மொழி மாநாடு கூட்டுகிறார்.
தேசிய இன விடுதலைக்கு புரட்சிகர ஜனநாயக மக்கள் இயக்கம் தேவை:
காலங்காலமாக ஆளப்படுவோருக்கு எது நலன் என்பதை ஆளுவோர்தான் தீர்மானிக்கிறார்கள். தங்களுக்கு எது நல்லதோ அதனைச் சமுதாயத்திற்கும் நல்லது எனச் சொல்லித்தான் நிலைநிறுத்துவார்கள். அப்படித்தான் புதிய காலனியாதிக்கவாதிகளும் அவர்களது அடிவருடிகளும் தமிழ்த் தேசிய இனத்திற்கு உகந்த ஆட்சி மொழியும், பயிற்று மொழியும் ஆங்கிலம்தான் எனக் கூறுகிறார்கள்.
சீனமும் செம்மொழிப் பட்டியலில் இருந்தது. அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதும் சீனமொழி உள்ளிட்ட 56 தேசிய இன மொழிகளும் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து வந்தன.
தமிழ் செம்மொழிப் பட்டியலில் இருந்தாலும் இந்தியத் தரகுப்பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு எல்லாத் தேசிய இனங்களின் மீதும் ஆங்கிலத்தையும் இந்தியையும் திணிக்கிறது; எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை (அரசியல் உரிமையை) மறுக்கிறது. எனவே தமிழ்த் தேசிய இனம் சுயநிர்ணய உரிமை பெறவும், தமிழ் மொழி ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பண்பாட்டு மொழியாகவும், அதற்குத் தடையாக உள்ள இந்த அரசுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசு நிறுவப்படவேண்டும்.
* அரைக்காலனிய-அரைநிலப்பிரபுத் துவ ஆட்சியின் கீழ் ஆங்கிலம், இந்தி ஆதிக்கம் தொடர்கையில் தமிழ் செம்மொழியானாலும், தமிழ், தமிழினம், தமிழ்நாட்டின் மீதான அடிமைத்தளை நீங்காது!
* தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும்; ஆட்சி மொழியாய், பயிற்று மொழியாய், வழிபாட்டு மொழியாய், அன்னைத் தமிழை அரியணையேற்றவும், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
பரிதிமாற்கலைஞர் தொடங்கிவைத்து, தமிழர் அனைவரும் நூற்றாண்டுக்குமேல் நடத்தி வந்த போராட்டத்தின் விளைவாக 2004ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் நாள் மத்திய அரசு தமிழ் மொழியைச் செம்மொழி என அறிவித்தது. கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், சீனம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கொண்ட உலகச் செம்மொழிப் பட்டியலில் தமிழும் சேர்க்கப்பட்டுவிட்டது.
செம்மொழி என்றாலே அது வாழும் மொழி, வளரும் மொழி, அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற்ற ஆட்சி மொழி என்று பொருள் அல்ல. தமிழ் மொழியைப் போன்று அடிமைப்பட்டிருக்கும் ஒரு மொழியை செம்மொழி என்று அறிவிப்பதால் அது விடுதலை பெற்றமொழி ஆகிவிடாது.
இச்செம்மொழிகளுள் இலத்தீன், கிரேக்கம், சமஸ்கிருதம் ஆகிய மூன்றும் ‘இறந்தமொழி’ என்பதற்கு எடுத்துக்காட்டு. கிரேக்கம், இலத்தீன் ஆகிய இருமொழிகளுமே வழக்கிறந்ததற்கு அரசியல் முக்கிய காரணம்.
கிரேக்க நாடு அடிமைப்பட்டிருந்ததால் கிரேக்க மொழியும் அழியும் நிலைக்குச் சென்றது. ரோமப்பேரரசின் அழிவுக்குப்பின் பலதேசங்கள் விடுதலைபெற்றதால், இலத்தீன் செம்மொழியாக இருந்தாலும் தேசம் இல்லாததால் இலத்தீன் மொழி அழிந்தது.
ஒரு மொழி வழக்கிறந்து போவதற்கு பல காரணங்கள் உண்டு. அரசியல் காரணமாக, பிற இனத்தவர் படையெடுப்பால் தாக்கப்பட்டு, நாடிழந்து அடிமைகளாய் வாழும் காலத்தில் வேறு வழியின்றி அந்நிய மொழித் திணிப்பினை ஏற்று மக்கள் தங்கள் மொழியினை காலப்போக்கில் கைவிட்டு புதிய மொழிகளை ஏற்க நேர்கிறது.
தொன்மையான மொழிகள் என்பவை சொல்திறனும் வளமும் சமுதாய வாழ்க்கை முறையில் செயலற்று நிற்பதாலேயே அவை வழக்கிறந்து நிற்கின்றன. தமிழில் இறந்த மொழி எனக் கூறுதல் மரபு அன்று. ஆகையால் ‘வழக்கு அழிந்த மொழி’ என்று குறிப்பிடுவர்.
“தமிழின் வாழும் தன்மையை,
ஆரியம் போல் உலக வழக்கு
அழிந்தொழிந்து சிதையா நின்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே” எனத் தமிழை வாழ்த்தினார், சுந்திரம்பிள்ளை அவர்கள்.
மொழி என்பது மக்கள் தொடர்புக்காக ஏற்பட்டது. சமுதாயக் கூட்டு வாழ்க்கையில் பயன்படுத்தப்படாத போது அது இறந்ததாகக் கருதப்படுகிறது.
சமூக உற்பத்தி, வாணிபம், விஞ்ஞானம், கல்வி, கலை, வரலாறு, சமயம் ஆகிய எல்லாத் துறைகளிலும் மொழி பின்னிப்பிணைந்திருக்கிறது. எனவே மொழியின் வளர்ச்சி இலக்கியத்துறையை மட்டும் சார்ந்ததாகாது. மொழி ஆக்கம் தரவேண்டுமானால், சில காலம் தேங்கிய இடைவெளிக்குப் பிறகு அதனை முன்னேறச் செய்யவேண்டுமானால், எல்லாத் துறைகளிலும் அதனை வளம்பெறச் செய்தல் வேண்டும்.
தமிழ் செம்மொழி என அறிவித்திருந்தாலும், இந்தியாவின் தரகுப் பெருமுதலாளித்துவ பெருநிலப்பிரபுத்துவ கூட்டுச் சர்வாதிகார அரசு ஆங்கிலத்தையும் இந்தியையும் திணித்து எல்லாத் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும், மொழியையும் அடக்குகிறது.
இத்தகைய சூழ்நிலையில் செம்மொழி மாநாடு பற்றி தமிழாய்வாளரான மா.இலா.தங்கப்பா பின்வருமாறு கூறுவது மனங்கொள்ளத்தக்கது:
“தமிழுக்குச் செய்யவேண்டிய அடிப்படை ஆக்க வேலைகள் இன்னும் செய்யப்படவில்லை. தமிழகத்திலேயே தமிழ் கட்டாயப் பாடமாக இல்லை. தமிழ் பயிற்று மொழியாக இல்லை. ஆட்சி மொழியாக இல்லை. தேவையற்ற ஆங்கில வெறியும், ஆங்கில வாணிகமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. வேற்று மொழியாளரின் வேட்டைக்காடாகத் தமிழகம் கிடந்து கொடிய சுரண்டலுக்கு உட்பட்டு உழலுகின்றது. உயிர் நிலையான அடிப்படை வேலைகள் எல்லாவற்றையும் செய்யாமல் வெறும் பகட்டான மேற்பூச்சு வேலைகளிலேயே ஈடுபட்டுவருவது தமிழக முதல்வரை பல்லாண்டு காலமாய்ப் பிணித்துள்ள ஒரு நோய் எனலாம். இப்பெருநோயின் மற்றோர் அறிகுறிதான் நடக்கவிருக்கும் செம்மொழி மாநாடு என்பதில் கடுகளவும் ஐயமில்லை.“
அந்நிய ஆதிக்கமும் ஆட்சிமொழியும்:
தமிழ் மொழியானது, கிரேக்கம், சீனம் போன்ற செவ்வியல் மொழிகளுக்கு நிகரான இலக்கிய வளமுடையது. நம் தமிழகப் பகுதியைப் பொறுத்து நீண்ட காலமாகவே அந்நிய மொழிகளே ஆட்சி மொழிகளாக இருந்து வந்துள்ளன. சோழர் காலத்திலும் ஆட்சிமொழியில் வடமொழிக்கு இருந்த செல்வாக்கை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்குப் பின்னர் ஆண்ட தெலுங்கர், மராத்தியர், இசுலாமியர் ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் மைய நிர்வாக மொழிகளில் தெலுங்கு, மராத்தி, உருது, பாரசீகம் ஆகியன செல்வாக்கு செலுத்தின. தமிழ் தனித்த அடையாளத்துடன் விளங்கிடப் பெரும்பாடுபட்டது. தமிழ் தனித்து இயங்கும் ஆற்றல் மிக்கது என்று காலந்தோறும் நிரூபிக்க வேண்டிய அவலத்திற்குள்ளாகியுள்ளது.
1857க்குப் பின் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியப் பகுதிகளை நேரடியாகத் தன் ஆட்சி அதிகாரத்துக்கு கொண்டு வந்த பின்னரே, இந்தியா என்ற ஒரு காலனி நாடு உருவானது. அதற்கு முன்னர் இந்தியா என்ற ஒரு நாடு இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை இந்தியாவில் ஆங்கிலமே ஆதிக்கத்தில் உள்ளது.
தமிழன் இன்று தமிழகத்தில் மட்டுமில்லை, மொரீஷியஸ், பிஜித்தீவு, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இங்கிலாந்து என உலகெங்கும் தமிழர்கள் பரவியுள்ளனர். இலங்கையில் தமிழீழம் உள்ளது, மற்றும் மலையக மக்கள் வாழ்கின்றனர். 18ஆம் நூற்றாண்டு தொடங்கி உலகமெங்கும் பிழைப்பதற்காகப் போன தமிழர்களின் புலம்பெயர் வாழ்க்கை துயரமானது. இன்று இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் சிறுபான்மை இனத்தவராகவோ, மொழிச் சிறுபான்மையினராகவோ வாழ்கின்றனர். இந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழைப் பேச அறியாது உள்ளனர். அவர்களின் வாழ்க்கையில் தமிழ்ப் பண்பாடு இன்னும் எந்த அளவில் இருக்கிறது என்பது ஆய்வுக்குரியது.
இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின்னர் இந்தியா போன்ற ஆசிய, ஆப்பிரிக்க, இலத்தீன்அமெரிக்க நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதிக்கம் புதிய காலனிய ஆதிக்கம் என்ற வடிவில் மறைமுகமாகத் தொடர்ந்து இருக்கிறது.
இத்தகைய புதிய காலனிய ஆதிக்கம், மொழியிலும் காணப்படுகிறது. இந்தநாடுகள் மூலதனத்துக்கும் தொழில் நுட்பத்துக்கும் ஏகாதிபத்தியவாதிகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளன. ஏகாதிபத்திய நாடுகள் கனிவளங்களையும் மனித உழைப்பையும் இந்தச் சார்பு நாடுகளிலிருந்து அபகரிப்பதை இன்றளவும் காண்கிறோம். இத்தகைய பின்புலத்தில் இந்த நாடுகளின் அதிகாரபூர்வ ஆட்சி மொழியாகவோ, அதிகாரபூர்வமற்ற ஆட்சிமொழியாகவோ, முதன்மொழியாகவோ, சமூகக் கௌரவமிக்க மொழியாகவோ ஏகாதிபத்திய நாடுகளின் மொழிகள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளன. இது மொழி வழியிலான ஏகாதிபத்திய ஆதிக்கம். இந்தியாவில் இது ஆங்கில மொழியின் ஊடாகப் பயணம் செய்கிறது.
1802 முதல் ஏகாதிபத்திய நலன்களுக்கு ஏற்ற விதத்தில் இந்தியப் பகுதிகள் அனைத்தும் நிர்வாக, அரசியல், இராணுவ, பொருளாதார நிலைகளில் வலுக்கட்டாயமாகவும் வன்முறையாகவும் ஒருங்கிணைக்கப்பட்டன. இது ஏகாதிபத்திய நலன்களுக்கான அனைத்திந்திய உருவாக்கமாகும். இதற்கு ஒற்றை அரசாங்க வடிவமும் (Unitary state) மையப்படுத்தப்பட்ட அதிகாரமும் தேவைப்பட்டன. அனைத்து தேசிய இனங்களும் சம உரிமையைப் பெறாத அனைத்திந்தியப் போக்கு, தேசிய இனங்களின் மொழிகள் ஆட்சி மொழியாவதற்கும் பயிற்று மொழியாவதற்கும் பெரும் தடையாக உள்ளது.
இந்த அனைத்திந்தியப் போக்கு என்பது உள்நாட்டில் இந்தி மொழிக்கான மேலாதிக்கத்துடன் வெளிப்படுகிறது. அரசியல் சட்டத்தில் இந்தி மொழிக்கும் சிறப்புத் தகுதி கொடுக்கப்பட்டுள்ளது. பலவழிகளில் தேசிய இன மொழிகளுக்குரிய சமத் தகுதி அரசியல் சட்டத்தில் மறுக்கப்பட்டுள்ளது. இது தேசிய இனங்களுக்கு இடையிலான சமத்துவமற்ற நிலையை அடிப்படையாகக் கொண்ட அனைத்திந்தியப் போக்கின் வெளிப்பாடு.
நமக்குத் தேவை தேசிய இனங்களின் சமத் தகுதியும், சம உரிமையும், சுயநிர்ணய உரிமையும் கொண்ட அனைத்திந்தியத் தன்மையாகும். இத்தகைய அமைப்பில் அந்நிய மொழியின் மேலாதிக்கம் ஒரு தேசிய இனத்தின் மீது இராது.
தாய்மொழிதான் என்றும் நம் ஆட்சி மொழி.
நம் தாய்மொழியாம் தமிழ்மொழி, இங்கு ஆட்சி மொழியாக, கல்விமொழியாக, தொடர்பு மொழியாக இல்லை. நமக்கான ஆட்சி, நமக்கான கல்வி நம் தாய் மொழியில்தான் இருக்கவேண்டும். மாறாக ஆங்கிலமும் இந்தியுமே இந்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கின்றன.
இன்று அரசின் அனைத்துத் துறைகளிலும் ஆங்கிலமே அதிகாரத்திலிருக்கிறது. மக்கள் தம் கருத்துக்களை வெளியிடவும் நிலைநாட்டவும், அரசின் போக்கை புரிந்துகொள்ளவும், விமர்சிக்கவும், அரசியல் அதிகாரத்தில் பங்குகொள்ளவும் ஆட்சிமொழி அம்மக்களின் தாய்மொழியாக இருக்கவேண்டும் என்பது உயிராதாரமான கோரிக்கையாகும். இக்கோரிக்கை இங்கு நிறைவேற்றப்படவில்லை. அரசுத் துறையின் கீழ்நிலைப் பணியாளர்களை வேலைவாங்குவதற்காக மட்டும்தான் தமிழ் ஓரளவு பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலை சரிதானா?
இங்கு ஆரம்பக் கல்வியும் ஆங்கிலத்தில், உயர் கல்வியும் ஆங்கிலத்தில், ஆங்கில வழியில் கற்றவர்களே மூளை உழைப்பாளர்களாக நியமிக்கப்படுவது என்கிற இந்தச் சூழலை மாற்றாமல் – ஆங்கிலத்தை அகற்றாமல் – தமிழ் மொழியைத் தமிழர்களின் முழுமையான வாழ்க்கை மொழியாக்க முடியாது. தமிழை முழுமையான அளவில் ஆட்சி மொழியாக பயிற்று மொழியாக மாற்றாமல் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை அகற்ற முடியாது.
புதிய காலனியும் பயிற்று மொழியும்:
தமிழகத்தில் இன்று மழலையர் பள்ளி முதல் பல்கலைக் கழகம் வரை ஆங்கில வழியிலேயே கல்வி கற்பிக்கப்படுகிறது. மழலையர் பள்ளி முதல் உயர்கல்வி கல்லூரி வரை எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்.
19.07.1854ல் இந்தியாவில் நவீன கல்வியை அறிமுகப்படுத்திய சார்லசு உட் குழுவின் நவீனக் கல்வியின் நோக்கங்களாகவும், பயிற்று மொழி முறைகளாகவும் எழுதிய பரிந்துரைகளில் ஏகாதிபத்திய நலனும் ஆங்கில மேலாதிக்கமும் அடிப்படையாக உள்ளன. இன்றைய கல்வியிலும் இவை தொடர்கின்றன.
பயிற்று மொழி என்பது கல்வியைக் கற்றுத்தரும் ஊடகம். கல்வியை உற்பத்தி முறையின் தேவையோடு தொடர்புபடுத்திக் காண வேண்டும். இன்றைய ஏகாதிபத்தியச் சார்பான உற்பத்தி முறைக்கு ஏற்பவே நம் கல்வியின் உள்ளடக்கம் அமைந்துள்ளது. அந்நிய ஏகாதிபத்திய நாடுகளுடனான கூட்டை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தியே இன்றைக்கு இந்திய முதலாளிய உற்பத்தியையும் நிலப்பிரபுத்துவ உற்பத்தியையும் மேலாதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவின் உற்பத்தியில் அந்நிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திவரும் உற்பத்தி இன்று அதிகமாக பெருகியுள்ளது. ஏகாதிபத்திய உலகமயக் கொள்கையும் இப்பொழுது அறிவிக்கப்பட்ட புதிய தொழில்க் கொள்கையும் ஏகாதிபத்திய நலன்களுக்கு உகந்ததாக உள்ளன. இது புதிய காலனிய முறை தொடர்வதையே நமக்குக் காட்டுகிறது. இத்தகைய உற்பத்திமுறைக்கேற்ற கல்வியே கீழிருந்து மேல்நிலை வரை அமைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய உற்பத்தி முறைக்குச் சார்பான கல்வியின் சாராம்சம்:
கொடுக்கப்படும் கல்வி ஏகாதிபத்தியச் சார்பானது, பரந்து பட்ட இந்திய மக்களுக்கானதாக இல்லை. இத்தகைய கல்வியின் பயிற்றுமொழி அந்நிய மொழியின் ஆதிக்கத்தை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பயிற்று மொழியின் ஆணிவேர் ஏகாதிபத்தியச் சார்புத் தன்மையில் அடங்கியுள்ளது. இந்தக் கல்வியின் பயிற்றுமொழி இந்திய மக்கள்விரோத உள்ளடக்கத்தின் வெளிப்பாடு.
கல்வியின் ஏகாதிபத்தியச் சார்பு உள்ளடக்கத்தை, தாய்மொழியை பயிற்றுமொழியாக ஆக்குவதற்குத் தடையாகக் கருதாமல்; பயிற்றுமொழி என்ற வடிவத்தை மட்டுமே மாற்றக் கோருதல், உள்ளடக்கத்தைப் புறக்கணித்துவிட்டு வடிவத்தை மட்டுமே கருத்தில் கொள்வதாகும். ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் நோக்கமற்ற விதத்தில், ஒரு தேசிய மொழியைப் பயிற்று மொழியாக்கிவிட இயலும் என்ற தவறான அரசியல் நம்பிக்கையை ஊட்டுவதற்கு துணைபோவதாகும்.
தாய்மொழிக் கல்விக்கு ஈடு இணை ஏதுமில்லை
நமக்கென்று ஒரு தாய்மொழி இருக்கும்போது அந்நிய மொழியில் கல்வி கற்பது தேவையே இல்லாத ஒன்று. தாய் மொழிதான் சிந்தனையின் மொழி. அதனால் தாய்மொழிக் கல்வியின் மூலம்தான் சுயசிந்தனை வளரும். ஆக்கபூர்வமான அறிவு கிட்டும். அந்நிய மொழிக் கல்வி சுமைமிக்கது. மேலும் மக்கள் மயமாவது இல்லை. எல்லோருக்கும் கல்வி கிடைப்பதற்கு ஒரே வழி தாய்மொழிக் கல்விதான்.
முன்பு வேதங்களை பார்ப்பனர்களின் ஏகபோகமாக வைப்பதற்காக, பிறர் வேதம் படிக்கத் தடை இருந்தது. பார்ப்பன-சத்திரியன் அரசியல் அதிகாரத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காகச் சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தைச் சொல்லி வைக்கலாகாது என இருந்தது போல, இப்போது உழைக்கும் வர்க்கத்திடமிருந்து கல்வியைப் பறித்து, மேல்தட்டுப் பிரிவினரின் ஏகபோகமாக்கிட அந்நிய மொழிக் கல்வி உதவுகிறது. ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்கவேண்டும் எனக் கோருவது நமது அடிப்படை உரிமையாகும். இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக ஆரம்பக்கல்வி முதலே ஆதிக்கம் செலுத்துகிறது. தமிழ்வழிப் பள்ளிகள் ஏதோ பெயருக்கு இருக்கின்றன.
தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்கும், தமிழ்மொழி ஆட்சி மொழியாவதற்கும், பயிற்றுமொழியாவதற்கும், அரைக்காலனிய அரை நிலப்பிரபுத்துவ இந்திய அரசு தடையாக இருக்கிறது. ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்யும் இந்திய அரசு தேசிய இனங்கள் சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் நடத்தும் போராட்டங்களைப் பாசிச முறையில் ஒடுக்குகிறது.
கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிக்கிறது. மாநில ஆட்சிகளும் மாநில அளவிலான தரகுமுதலாளியக் கட்சிகளும் கட்டாய ஆட்சி மொழியாக ஆங்கிலமே இருக்கவேண்டும் என வலியுறுத்தின. இனச் சமத்துவத்தையும், மொழிச் சமத்துவத்தையும் மறுத்து, மைய அரசு செயல்படுத்திவரும் தேசிய இன ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொண்டே மாநில ஆட்சிக்கு அதிக அதிகாரம் கோருவதோடு தம்மைக் குறுக்கிக் கொண்டன. தமிழகத்திலும் இதுதான் நடந்தது.
தமிழை முழுமையாக ஆட்சி மொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சிசெய்யப்படவில்லை. மாறாக, ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகத்தான் இங்குள்ள திராவிடக் கட்சிகள் அரும்பாடுபட்டன.
செம்மொழி மாநாடு
">அண்டை வீட்டில் இழவு விழுந்தால் ஏதோ எம் வீட்டில் நடக்ககூடாது நடந்துவிட்டது போல ஒரு தவிப்புடன் இருப்போம். சில காலத்திற்கு எம் வீட்டின் நல்ல காரியங்களைக் கூட தள்ளி வைப்போம். ஆனால் இந்த பாதகன் அண்டை நாட்டில் சொந்த மக்கள் கொத்துக் கொத்தாக பொசுக்கப்பட அந்த நேரத்தில் வாரிசு அரசியலுக்காக அங்கும் இங்குமாக தள்ளாத வயதிலும் நாயோட்டம் ஓடிவிட்டு இப்ப தன் புகழ் பாட ஒரு விழா எடுக்கிறான்....தன் சொந்தங்களின் இரத்தம் காய்வதற்குள் .....!!! தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகவும், தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்கவும் பயிற்றுமொழியாக்கவும் போராடக் கிளந்தெழும் மக்களைத் திசை திருப்புவது இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதற்கான நோக்கங்களில் ஒன்று.
தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்தச் சொல்லி தங்கள் கோரிக்கையை இந்தியாவுக்கு எடுத்துரைத்துப் போராடினார்கள் தமிழ் மக்கள். ஆயினும் சிங்களப் பேரினவாத பவுத்த மதவாத இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்வதற்கு மாறாக, ஆயுதம் கொடுத்தும், பண உதவி செய்தும், போரில் மறைமுகமாகப் பங்குகொண்டு தமிழீழ மக்களின் விடுதலைப் போரை முறியடிப்பதிலும் மக்களைக் கொன்று குவிப்பதிலும் பெரும் பங்காற்றியது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இரட்டைவேடம் பூண்டு இந்தப் போரில் இலங்கை அரசுக்கு மறைமுக ஆதரவுகொடுத்து தமிழீழ மக்களுக்குத் துரோகம் செய்தார். இந்தத் துரோகத்தை மறைத்தல் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படுவதற்கு மற்றொரு நோக்கமாகும்.
பழந்தமிழ்ப் பெருமை பேசல் இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே!
வேறுவிதமாகச் சொன்னால், பழந்தமிழ்ப் பெருமைபேசி இன்றைய தமிழன் அவலம் மறைக்கவே செம்மொழி மாநாடு. இதுதான் கலைஞர் கருணாநிதியின் தந்திரம். சுந்திரம்பிள்ளை, பரிதாமாற்கலைஞர் ஆகியோர் இவருக்கு வழிகாட்டிகள்.
ஆரியம் வழக்கொழிந்து போகத் தமிழ் இளமை மாறாதிருப்பதகாக் கூறிச் செல்கிறார் சுந்தரம்பிள்ளை அவர்கள். இது பின்னோக்கிப் பார்த்து பழமை பேசும் செயலாகும். சென்ற காலத்தின் சிறப்புப் பற்றிய குரல் இது. அதே தமிழ் மொழி தனது காலத்தில் அறிவியல் துறையில் பின்தங்கி இருப்பதைக் காணவில்லை.பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தமிழ்மொழி அனைத்துத் துறைகளிலும் ஆங்கில மொழி ஆதிக்கத்திற்குட்பட்டிருப்பதைப் பற்றியும் கவலையில்லை. தமது காலத்து விவகாரங்களில் வெள்ளைக்கார ஆட்சியையும் சமஸ்தான மன்னராட்சியையும் சுந்தரம்பிள்ளை ஏற்றுக்கொண்டார். நிலவிய அரசியல் வரம்பிற்குள் மொழி, இலக்கியம் முதலியவற்றை பேணுவதே இலட்சியமாகக் கொண்டார்.
கலைஞர் கருணாநிதி அவர்களும் பழந்தமிழ்ப் பெருமை பேசுகிறார். ஆனால் அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ அரசினால் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, குறிப்பாகத் தமிழ்தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை, தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்குவது, பயிற்றுமொழியாக்குவது ஆகியவற்றிற்கான போராட்டத்தைக் கைவிட்டு எங்கும் எதிலும் ஆங்கிலமயப்படுத்துகிறார்.
சுந்தரம்பிள்ளை போன்றோர் மீது பாரதி வைத்த விமர்சனம் கலைஞருக்கும் பொருந்தும்.
“மறைவாகத் தமக்குள் பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை”அதுமட்டுமல்ல.முக்காலத்தை
“முன்னர் நாடு திகழ்ந்த பெருமையும்
மூண்டிருக்கும் இந்நாளின் இகழ்ச்சியும்
பின்னர் நாடுறு பெற்றியும் தேர்திலார்
பேடிக்கல்வி பயின்றுழப் பித்தர்கள்”
கலைஞர் கருணாநிதி, மூண்டிருக்கும் இந்நாளின் நிகழ்ச்சியை நன்கறிந்தவர்தான். ஆனால் கண்முன் கண்ட நிகழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் விமோசனம் தேடுவதற்குப் பதிலாக அகில இந்திய தரகுமுதலாளித்துவத்துடன் சமரசப் பாதையைப் பின்பற்றுகிறார். எனவே பழந்தமிழ்ப் பெருமைபேசி இன்றைய தமிழரின் அவலத்தை மறைக்க செம்மொழி மாநாடு கூட்டுகிறார்.
தேசிய இன விடுதலைக்கு புரட்சிகர ஜனநாயக மக்கள் இயக்கம் தேவை:
காலங்காலமாக ஆளப்படுவோருக்கு எது நலன் என்பதை ஆளுவோர்தான் தீர்மானிக்கிறார்கள். தங்களுக்கு எது நல்லதோ அதனைச் சமுதாயத்திற்கும் நல்லது எனச் சொல்லித்தான் நிலைநிறுத்துவார்கள். அப்படித்தான் புதிய காலனியாதிக்கவாதிகளும் அவர்களது அடிவருடிகளும் தமிழ்த் தேசிய இனத்திற்கு உகந்த ஆட்சி மொழியும், பயிற்று மொழியும் ஆங்கிலம்தான் எனக் கூறுகிறார்கள்.
சீனமும் செம்மொழிப் பட்டியலில் இருந்தது. அரைக்காலனிய அரைநிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றதும் சீனமொழி உள்ளிட்ட 56 தேசிய இன மொழிகளும் பாதுகாக்கப்பட்டு வளர்ந்து வந்தன.
தமிழ் செம்மொழிப் பட்டியலில் இருந்தாலும் இந்தியத் தரகுப்பெருமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசு எல்லாத் தேசிய இனங்களின் மீதும் ஆங்கிலத்தையும் இந்தியையும் திணிக்கிறது; எல்லாத் தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை (அரசியல் உரிமையை) மறுக்கிறது. எனவே தமிழ்த் தேசிய இனம் சுயநிர்ணய உரிமை பெறவும், தமிழ் மொழி ஆட்சிமொழி, பயிற்றுமொழி, பண்பாட்டு மொழியாகவும், அதற்குத் தடையாக உள்ள இந்த அரசுக்குப் பதிலாக மக்கள் ஜனநாயக அரசு நிறுவப்படவேண்டும்.
* அரைக்காலனிய-அரைநிலப்பிரபுத்
* தமிழினம் சுயநிர்ணய உரிமை பெறவும்; ஆட்சி மொழியாய், பயிற்று மொழியாய், வழிபாட்டு மொழியாய், அன்னைத் தமிழை அரியணையேற்றவும், மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!
* ஈழத்தமிழருக்கு இழைத்த துரோகம் செம்மொழி மாநாட்டால் மறைந்துவிடாது!* உலகத்தொழிலாளர்களே! ஒடுக்கப்பட்ட தேசங்களே! ஒன்றுபடுவோம்!!
= நன்றி =
மீள்பதிவு :அக்கினி புத்திரன்
Subscribe to:
Posts (Atom)